Thursday, May 10, 2018

[vallalargroups:5956] முத்தேக சித்தி அனுபவத்தைப் பெறுவதற்கு

அருட்பெருஞ்ஜோதி🔥
            அருட்பெருஞ்ஜோதி🔥தனிப்பெருங்கருணை🔥
             அருட்பெருஞ்ஜோதி🔥
                   மந்திரம்💥
                      மருந்து🌿
                         மணி🔥
                   *************
          ஆன்மநேய உயிர் உறவுகளாகிய சகோதர சகோதரிகளுக்கு பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனத்தை தயவுடன் தெரிவித்து 
மகிழ்கின்றேன்💐🙏
          அருமை சகோதர சகோதரிகள் தயவுசெய்து இந்தப் பதிவை ஒரு ஐந்து நிமிடம் பொறுமையுடன் பார்த்து படித்து அறிந்துகொள்ள
வேண்டி, தயவுடன் விண்ணப்பித்துக் கொள்கின்றேன்🙏.
          எத்தனையோ கலை நிகழ்ச்சிகளுக்கு நாம் குடும்பத்துடன் சென்று அமர்ந்து பொறுமையுடன் குறைந்தது மூன்று மணிநேரத்திற்கும் மேலாக நேரத்தைக் கழித்து ,
        எந்தவிதத்திலும் நமது உடம்பிற்கோ உயிருக்கோ  எந்தவிதப் பயனைத் தராமலும்,
வெறும் மனதளவில் சந்தோஷித்து , கண்ணால் பார்க்கின்ற அந்த நேரத்தில்மட்டும் ஒருசிறு மணித்துளிகள் மனதிற்கு மகிழ்வைத் தரக்கூடிய சிற்றின்பத்தால் காலத்தை விரையம் செய்து, வளர்ந்து, வாழ்ந்து வயோதிகத்தால் நரை திரை மூப்பு கண்டு இறுதியில் மாண்டு மடிந்துப் போக்கின்ற நாம் அனைவரும் ,
     என்றாவது நாம் பெறுதர்கரிய 
இந்த மானிடத்தேகத்தைப் பெற்றுக்கொண்டோமே ,
இந்த உடம்பின் வகையையும், உயிரின்வகை ,
இவ்விரண்டையும் இயக்கும் சிவமாகிய பரம்பொருள் தன்மையையும்ம், அருள்சக்தியின் ஆற்றலையையும் பற்றி என்றாவது சிந்தித்திருப்போமா ?

     இதைத்தான் நமது அருட்பெருந்தந்தை அருட்பிரகாச வள்ளல் பெருமான் திருவருட்பா ஆறாம்திருமுறை பக்கம் 340 முறையீடு என்ற தலைப்பில் கடைசி பாடலில் தமது வருத்தத்தை பதிவுசெய்து நமக்காக  நமது அலட்சியப்போக்கை நினைத்து ,மனம் வருந்தி வெளிப்படுத்தியுள்ளார்கள்.
 
 பாடல்;🌷
 சிரிப்பிலே பொழுது கழிக்கும் இவ்வாழ்க்கைச் 
           சிறியவர்  சிந்தை 
             மாத்திரமோ
பொருப்பிலே தவஞ்செய் 
பெரியர்தம் மனமும்
             புளிப்பிலே துவர்ப்பிலே
             உவர்ப்புக் 
கரிப்பிலே கொடிய 
கயப்பிலேகடிய
             கார்ப்பிலே
             கார்ப்பொடு கலந்த
எரிப்பிலே புகுவதன்றி 
எள் அளவும்
         இனிப்பிலே
               புகுகின்ற திலையே;
....என்று இவ்வுலகில் நம்மை அகமிருந்து ஆளும் நமது அருட்பெருந் தலைவராகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடைய தரம் அறியாது, நிலையற்ற இவ்வுலகவாழ்வையே நிலையாகப் பிடித்துக்கொண்டு விரும்பி களித்து காலத்தை வீணாக்குகின்ற ஆன்ம சிறுமையையுடைய சிறியவர்கள்தான் மண்ணாசை பெண்ணாசை பொன்னசை என்ற விடய சிற்றின்ப நிகழ்வுகளில் காலத்தை வீணடிக்கின்றார்கள் என்றால் !
    இவை எல்லாவற்றையும் அறிந்திருக்கும் தவத்தில் சிறந்த பெரியோர்கள்கூட தமது மனத்தை தேனாய் தெள்ளமுதாய் இனிக்கும் அழிவற்ற நிலையான பேரின்பத்தை அளிக்கக்கூடிய அருள்வாழ்வை நாடச்செய்யாமல் ,
    மற்றைய  விடய விஷயங்களில் நாடச்செய்து பொருப்பற்று காலத்தை விரையம் ஆக்குகின்றார்களே என்று நமது அருட்பெருந் தந்தை அருட்பிரகாச வள்ளல் பெருமான் மிகவும் வருந்துகின்றார்கள்👏.
     உயர்ந்த ஆறறிவு உடைய உயர்பிறப்பாகிய மனித தேகத்தைத்தைப் பெற்றுள்ள நாம் நமது மனித பிறப்பு எதற்கு கொடுக்கப்பட்டது?
   
     இம்மானுடத் தேகத்தினால் அடையவேண்டிய நமது ஆன்ம லட்சியம்தான் என்ன?
    
      நமக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த உடம்பின் உயர்ந்த தரம் என்ன ?
   
     இவ்வுடம்பை இயக்கும் நமது உயிரின் தரம் என்ன ?
    
       இவ்வுயிரையும் இவ்வுடம்பையும் நமது ஆன்ம உள்ளொளியாய் இருந்து இயக்கும் நமது ஆன்மநாயகராகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தரம் என்ன ?
        
         இந்த உடம்பை நாம் என்ன செய்தல் வேண்டும் ?
        
       நமது உயிராகிய ஆன்மா எந்த நிலை அடைதல் வேண்டும் ?
         என்று என்றாவது பொருப்போடு விசாரித்து விளக்கம் பெற்றுள்ளோமோ ?
    அதற்காண முயற்சியை மேற்கொண்டுள்ளோமா ?

     எனது ஆன்ம உயிர் உறவுகளே !
     ஆயிரம்கோடி சூரியப் பிரகாசமுடைய அருட்பெருஞ்ஜோதியை நமது ஆன்மாவின் அகத்தில் கொண்டுள்ள நாம் எப்படிப்பட்ட அற்புத சக்தியோடு  இருக்கின்றோம் என்பதும்.
    அந்த அற்புத சக்தியை நாம் எப்படி அடைவது என்பதும்.
   அவற்றை அடையவிடாமல் நமக்கு தடையாக மறைப்பாகவும் திரைகளாகவும் இருக்கின்றவைகள் எவை எவை என்பதையும் அறிந்திருக்கின்றோமா?
     அவற்றை அறிந்து அடைந்தவர்கள் சித்தர்களாகவும் ஞானிகளாகவும் மாறிவிட்டார்கள் ஆனால் நாம் ........?

     🙏🔥பொய்யுடம்பும் மாற்று 
         அரியா பொன்னுடம்பும்🔥🙏
         நாம் பெற்றுள்ள இந்த அசுத்த புலால் உடம்புதான் ,
      மாற்று (தங்கத்தின் மதிப்பைக் குறிக்கும் அளவீடு) இத்தனை என்று அளவிடமுடியாத சுத்த பொன்னுடம்பாய் மாறக்கூடியது என்பதை நாம் அறிந்துள்ளோமா ?
          ஆம் நாம் பெற்றுள்ள இந்த உடம்பு  பஞ்சபூதத்தில் மண்ணின் தன்மைக்கொண்டு விளங்கும்  இம்மண்ணுடம்பிற்கு "மெய்" என்றும் ஓர் பெயர் உண்டு. 
      " பொய்" என்பது நிலையில்லாமல் அழியக்கூடியது.
         "மெய்" என்பது அழிவற்று என்றும் நிலையாக இருக்கக்கூடியது.

 நமது அசுத்த இந்திரியங்களையும்,
நமது அசுத்த அறிவையும்,
நமது அசுத்த கரணங்களையும்,
நமது அசுத்த ஜீவனையும்,
நமது அசுத்த ஆன்ம குற்றங்களையும்
திருவருட் சேர்க்கையால்(அருளொளி) சுத்த இந்திரியங்களாகவும்,
சுத்த கரணங்களாகவும்,
சுத்த ஜீவனாகவும்,
மலங்களற்ற சுத்த ஆன்மாவாகவும்  மாற்றம் செய்து ,
கடவுளது மெய்யறிவையும்,
கடவுளது மெய்யுடம்பையும் பெற்று இவ்வுலகில் அருள்வாழ்வு வாழப்பிறந்தவர்கள் என்று ,
நாம் நமது அற்புதத்தன்மையை என்றாவது உணர்ந்திருக்கின்றோமா?

   ஆன்மநேய உயிர் உறவுகளே ,
   இப்படி இந்த அசுத்த பொய்யான புலால் உடம்பை சுத்த பொன்னுடம்பாய் மாற்றி நமது அகம் நிறைந்துள்ள கடவுளின் தன்மையை முழுவதும் பெற்று வாழக்கூடிய வழி துறைதான் இந்த மருந்து மந்திரம் மணி என்பவைகளாகும்.

     🙏�மருந்தறியேன்,     
            மணியறியேன் ,
                மந்திரம் ஒன்றறியேன் 🔥🙏
        மேற்கூறிய இந்த மருந்து மந்திரம் மணிவகை அறியாமல்தான் நமது வள்ளல் பெருமான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் ,
முறையீடு செய்கின்றார்கள்.
  திருவருட்பா ஆறாம்திருமுறையில் முறையீடு என்ற 9வது தலைப்பில் முதல் பாடலாக ,
 மருந்தறியேன் மணிஅறியேன் மந்திரம் ஒன்றறியேன்
 மதியறியேன் விதிஅறியேன் வாழ்க்கை நிலை அறியேன்.
      ....என்று ஆண்டவரிடம் முறையிட்டு வேண்டுகின்றார்கள்.

 இதில் ,
மருந்து சுத்த உடம்பையும்,
மந்திரம் பிரணவ உடம்பையும்,
மணி ஞான உடம்பையும் தரவல்லது.
   எப்படி என்றால்

மருந்து 🌿(அருள் உணவு) ;
        மருந்து என்பது நமது முதலாவது அசுத்த தூல உடம்பை திருவருட் சேர்க்கையால் சுத்தமாகிய சத்துவகுணம் நிறைந்த அருளைத் தரவல்ல  இயற்கை தாவர "சுத்த அருள் உணவினால்" "சுத்த பொன் உடம்பாய்" மற்றித் தரவல்லது🌿

மந்திரம் 💥(அருள் உணர்வு);
      மந்திரம் என்பது நமது இரண்டாவது சூக்கும அசுத்த கரண உடம்பை திருவருட் சேர்க்கையால் சுத்த "அருள் உணர்வினால்" சுத்த "ஓங்கார பிரணவ தேகமாய் " மாற்றித் தரவல்லது💥

மணி 🔥( அருள் ஒளி );
           மணி என்பது நமது மூன்றாவது தேகமாகிய அசுத்த காரணத் தேகத்தை திருவருட் சேர்க்கையால் அருளொளிக்கண்டு "அருள் உறவினால்"சுத்த ஞானத் தேகமாக மாற்றித் தரவல்லது என்பதாகும்.

      இந்த முத்தேக சித்தி நிலைதான் அருட்பெருஞ்ஜோதி கடவுளது தன்மையோடு விளங்கும் 
எல்லாம் செய்யவல்ல ஞான சித்திநிலையாயும்,
அழிவற்ற இயற்கை அருட்பெருஞ்ஜோதி பெருவாழ்வு நிலையாகவும் உள்ளது.

     இந்த உண்மையை தமது அகத்தில் அனுபவித்து அறிந்திருந்த நமது தமிழ் சித்தர்கள் , புறத்தில் அந்த கடவுள் அனுபவத்தை தத்துவமாக உலகிற்கு உணர்த்துவதற்காகத்தான் கோயில் கற்பகிரகங்களில் கடவுள் சிலைகளை அற்புத சித்த மருந்துகளாலும்,
நவமணிகளாலும்,
மந்திரத்தினாலும் உச்சாடனம் செய்து கடவுள் சிலைகளை அமைத்து மக்களை வழிபடச்செய்தார்கள்🌷💐.

🙏🔥 மருந்துஇது,
             மந்திரம்இது 
                மணிஇது என்று அறிந்துகொள்ளல்🔥🙏
            மேலே கண்ட முறையீடு பாடலில் நமது அருட்பெருந்தந்தை வள்ளல் பெருமான் , இந்த மருந்து மணி மந்திரம் எதுவென்று அறியாமல் ஆண்டவரிடம் முறையிட்டு அழுதார்கள்.
     அதன் பலனாக அந்த மருந்தையும் மருந்தையும் மணியையும் ஆண்டவர் அறிவித்து அருளியதை,
ஆறாம்திருமுறை "அருட்பெருஞ்ஜோதி என் ஆண்டவர் " என்ற தலைப்பில் ஆண்டவர் தனக்கு அருள்பாளித்த வல்லபத்தை கீழ்கண்ட பாடல் மூலம் தெளிவுபடுத்துகின்றார்கள்.
பாடல்💐🌷
மருந்துஇது
மணிஇது மந்திரம்இது 
       செய்வகைஇது  
        துறைஇது
        வழிஇது எனவே
இருந்தெனுள் அறிவித்துத் தெள்ளமுதளித்தே
          என்னையும்   
          தன்னையும்
          ஏகமதாக்கி
........என்று ஆண்டவர் மருந்து மணி மந்திரத்தை அருளொளியால் பெறச்செய்த அனுபவத்தை இப்பாடல் பாடல்மூலம் பெருமான் பதிவுசெய்கின்றார்கள்.

  🙏🔥 அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே மருந்தாய் மணியாய் மந்திரமாய் இருப்பது🔥🙏   
    அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே மருந்தாய் மந்திரமாய் மணியாய் இருப்பதை அருட்பா ஆறாம்திருமுறை "காட்சி களிப்பு"என்ற 41 வது தலைப்பில் 7வது பாடலில் ,
 மருந்தானை மணியானை வழுத்தா
         நின்ற மந்திரங்க
         ளானானை
         வானநாட்டு
விருந்தானை உறவானை  நண்பினானை....
      என்று மருந்தாயும் மணியாயும் மந்திரமாயும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே இருந்து அருள்பாளிப்பதையும் நமது அருட்பெருந் தந்தை அருட்பிரகாச வள்ளல் பெருமான் நமக்குத் தெளிவுபடுத்துகின்றார்கள்.

     மேலும் மருந்தாய் ,மந்திரமாய்,மணியாய் இருக்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எப்படியெல்லாம் நமது உடம்பை பற்றியிருக்கும் பிணியையும்,
 உயிரைப் பற்றியிருக்கும் பிணியையும் நீக்கி,
 இவ்வுடம்பை 
சுத்த  பொன்னுடம்பாகவும்,
சுத்த பிரணவ உடம்பாகவும்,
சுத்த ஞான உடம்பாகவும் மாற்றித் தருகின்றார்கள் என்பதை "அருட் பெருஞ்ஜோதி அகவல் "
1291வது வரி தொடங்கி 1336 வரிவரை பார்த்து படித்து அறிந்து உணர்ந்து அருள்ளொளியால் முத்தேக சித்தி அனுபவத்தைப் பெறுவதற்கு முயல்வோம்;
இதனை விரிக்கில் விரிந்துகொண்டே இருக்கும்,
ஆனால் நமக்கு படிப்பதற்கு மனம் பொறுமையுடன் சம்மதிக்காது என்ற காரணத்தினால் இத்துடன் நிறைவுசெய்துக்கொள்கின்றேன்;
......நன்றி 🙏
........வள்ளல் மலரடிப் போற்றி ! போற்றி ! 🔥🙏
....பெருமான் துணையில்🔥🙏
......வள்ளல் அடிமை 🙏
.....வடலூர் இரமேஷ்🙏

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)