Monday, November 13, 2017

[vallalargroups:5802] மேட்டுக்குப்பம் அருகில் உள்ள தீஞ்சுவை நீரோடை செய்தி

அன்புடையீர் வந்தனம் !

வடலூருக்கு அடுத்த மேட்டுக்குப்பம் அருகில் உள்ள தீஞ்சுவை நீரோடை என்னும் இடத்தில் சத்திய தருமச்சாலையை அமைத்து நடத்திவரும் நந்தி சரவணன் அவர்களின் தருமச்சாலை நேற்று இரவு தீயுக்கு இரையாகி விட்டது.இது தற்செயலா மற்றவர்களின் தீய செயலா என்பது தெரியவில்லை. இவற்றை பார்க்கும் போது அளவில்லா  துயரம் அடைகிறேன்..இந்த நேரத்தில் நந்திசரவணனுக்கு ஆறுதல் சொல்வதைத் தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை.

எந்த உயிருக்கும் ஆபத்து இல்லாமல் பொருள் சேதம் அடைந்துள்ளன.அதுவே இறைசெயல்

24.மணி நேரமும் இடைவிடாது பசியாற்றிவரும் தருமச்சாலை இல்லமாக திகழ்ந்து கொண்டு வந்த்து. அனைத்து மக்களுக்கும் தெரியும்.இப்போது தீயிக்கு இரையாகிவிட்டது.எல்லாம் திருவருள் செயலே.

இனி தீயிக்கு இரையாகும் கீத்து கொட்டகை மேயாமல்.தீயிக்கு இரையாகாத காங்கிரீட் கட்டிடம்  கட்டி தருமச்சாலை தொடங்க வேண்டும்....

அவற்றிற்கு தயவு உள்ளம் கொண்ட அருளாளர்களும்.ஜீவ காருண்யம்.ஜீவ தயவு உள்ள சமுசாரிகளும்.கட்டிடம் கட்ட பொருள் உதவியும் பண உதவியும்  செய்ய வேணுமாய் அன்புடனும் பாசத்துடனும் .தயவுடனும் கேட்டுக் கொள்கிறேன்.

மீண்டும் ஜீவகாருண்ய பணி தொடர்ந்து நடைபெற எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் துணைபுரிவார்.அருள் புரிவார்..

அனைவரும் நந்தி சரவணனுக்கு ஆறுதல் சொல்வோம்.ஆதவராய் இருப்போம்.அனைத்து உதவிகளையும் செய்வோம்.

புதிய தருமச்சாலை புத்துணர்வோடு ஆரம்பமாகும்.எல்லாம் நன்மைக்கே...

நல்லதே நடக்கும்..

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)