Wednesday, July 3, 2013

[vallalargroups:4995] இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு !

                                    
 
                    பசித்திரு !               தனித்திரு !               விழித்திரு !
 
           அருட்பெருஞ்சோதி ! அருட்பெருஞ்சோதி !
         தனிப்பெருங்கருணை ! அருட்பெருஞ்சோதி !
 
     கொல்லா விரதம் குவலயமெல்லாம் ஓங்குக !
     ஜீவகாருண்யமே மோட்சவீட்டீன் திறவுகோல் !
 
      எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
 
 இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு !
 
அன்பர்களே நம்துவடலூர் வள்ளல் பெருமானார் திருகரத்தினால் வரைந்த திருஅருட்பா
பாடல் ஒன்றை தங்கள் முன்னாள் சமர்பிக்கின்றோம்.
 
             புகும்தருணம் இதுகண்டீர் நம்மவரே நான்தான்
                புகல்கின்றேன் என்மொழி ஓர் பொய்மொழி என்னாதீர்
            உகும்தருணம் உற்றவரும் பெற்றவரும் பிறரும்
               உடைமைகளும் உலகியலும் உற்றதுணை அன்றே
            மிகுந்தசுவைக் கரும்பே செங்கனியே கோல்தேனே
               மெய்ப்பயனே கைப்பொருளே விலையறியாமணியே
            தகுந்த தனிப்பெரும்பதியே தயாநிதியே கதியே
               சத்தியமே என்று உரைமின் பத்தியோடு பணிந்தே
                                              
                                                                                        திரு அருட்பா....
   அன்பர்களே நம்முடைய உறவினத்தவர்களே என்றும் உங்கள் அபிமானத்துக்குரிய அடியேன் சிற்றறிவிற்க்கு ஏற்ப்ப  உரைக்கின்றேன் . நமது அருட்பெருஞ்சோதி ஆண்டவர் பொற்சபையில் நம்முடைய  
சிற்சபை புகும் நேரம் இது. நம்மை இந்த உலகிற்ர்க்கு தந்தவரும்மாகிய தாய் தந்ததை, மற்றும்  உற்றார் உடன்பிறப்புகளும், மற்றவரும் உடமைகளும்,நாம்வாழும் இந்த உலகியற் கொள்கைகளும் 
நம்மை காப்பாற்றும் துணையாகமாட்டா.
 
நற்சுவைமிகுந்த கரும்பே ,செழுங்கனியே ,கொம்புத்தேனே சத்திய தயவினால் விளையும் பெரும்பயனே 
நம்கையில்கிடைத்த பெரும்பொருளே,மனிதன் சிற்றறிவினால் அளவிடமுடியாத ஞானமணியே,
ஒப்பற்ற தகுதியுடைய தனிப்பெரும் பதியாகிய தயாநிதியே உம்மையே கதியாக சத்தியமிட்டு சொல்லுங்கள் அதுவும் எவ்வாறெனில் உண்மை பக்தியால் வனைந்து வனைந்து வேண்டுங்கள்.
அப்பொழுது அற்புதம் விளங்ககூடிய ஆண்டவருடைய பொற்சபையிலே இறைவனுடைய
திருநடனத்தை கண்குளிர கண்டு மரணமில்லா பெருவாழ்வில் வாழ்ந்து பேரானந்தமடைவீர்கள்
 
அப்பொழுது நீங்களும் உங்களை சார்ந்தவர்களும் சீரும் சிறப்புடனும்வாழ  நமது வடலூர் 
வள்ளல்பெருமானார் வணங்கிய அருட்பெருஞ்சோதி ஆண்டவர் நம்மை எறாநிலைக்கு 
ஏற்றிவைப்பார் என்பதில் சிறிதும் ஐயமில்லை        
 
 
   பசி என்று வருவோர்க்கு உணவுகொடு அதுவே ஜீவகாருண்யம் !
   ஜீவகாருண்யமே மொட்சவீட்டீன் திறவுகோல் !
 
   எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

     
 
  கொல்லா விரதம் குவலயமெல்லாம் ஓங்குக !
 
  என்றும் உங்கள் அபிமானத்துக்குரிய அன்பன்
  ஆன்மநேய .அ.இளவரசன்
  வள்ளலார் உயிர்வதை தடுப்பு இயக்கம்
  நெ.34,அண்ணா தெரு,
   திருவள்ளுவர் நகர்,
   ஜமின் பல்லாவரம்
   சென்னை -6000 043
   கைபேசி:9940656549    
     

--
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
 
 

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)