Sunday, May 5, 2013

Re: [vallalargroups:4885] முருகப் பெருமான் யார்?

Kindly see the explanations given in Thiru Arutpa Urai nadaippakuthi under the

title SUBRAMANIYAM.

Kamam(lust) is to be completely annihilated for progress in the spiritual world and 

kamam has no role in creating 'ulludambu'.

Namasivayam 




From: Arul Prakash <arulfive@gmail.com>
To: vallalargroups@googlegroups.com
Sent: Thursday, May 2, 2013 7:11 PM
Subject: Re: [vallalargroups:4883] முருகப் பெருமான் யார்?

ungaloda thagaval epavum maratha alavuku koduthurukinga.




2013/5/2 Vallalar Groups <vallalargroups@gmail.com>
முருகப் பெருமான் யார்?

தவயோகி ஞானதேவபாரதி சுவாமிகளின்
காமனை எரித்தார் கண்ணுதல் கடவுள் கட்டுரையிலிருந்து..

சிவம் தவம் செய்கிறார். காமன் காமத்தை உண்டாக்க மலர் அம்பு தொடுக்கிறான். கண்ணுதல் கடவுள் நெற்றிக் கண்ணைத் திறக்கிறார். காமன் எரிந்து விடுகிறான். அந்த நேரத்தில் யோகக் கனல் உண்டாகிறது. அதை ஆறு கார்த்திகை பெண்கள் ஏந்துகிறார்கள். சரவணப் பொய்கையில் குளிர்விக்கிறார்கள். அதுவே அறிவுக்கடவுள் முருகனாக பிரகாசிக்கின்றது. இது புராணம், இதுவே யோக ரகசியமாக மாறுவதை விரிவாகக் காண்போம்.

ஒரு யோகி தவம் செய்யும் போது சரியான நெறி பற்றி நின்றால் உடலில் காம இச்சை அதிகமாகும். அந்த நேரத்தில் மன்மதனின் மலர் அம்பு மகத்துவம் பெற்று விட்டால் யோகி சறுக்கி விழுந்து விடுவார். காமம் உண்டாகும் போகு உடலில் ஆக்ஞா சக்கரத்தில் சுத்தக்கனல் உதயமாகி விட்டால் காமம் எரிந்து விடும். அப்படி காமன் எரிக்கப்பட்டதும், மாபெரும் யோக சக்தி உண்டாகும், பிறகு ஆறு ஆதார தெய்வங்களும் கார்த்திகைப் பெண்களாக அந்த யோக சக்தியைப் பெற முன்வருவார்கள்.

பிறகு சரவணப் பொய்கை என்கிற சகஸ்ரதளத்தில் குளிர்விக்கப்படும். அதன் பிறகு அறிவு தெய்வமான அழகு தெய்வமான முருகன் என்கிற உள்ளுடம்பு ஒளியுடலாக வாழமுடியும். இதைத்தான் ஒளவையார் ஞானக்குறளில் "உடம்பினை பெற்ற பயனாவதெல்லாம் உடம்பினுள் உத்தமனை காண்" என்றார்கள். இந்த உடம்பை வைத்து உள்ளுடம்பை உருவாக்கத் தெரியாதவர்கள், பிறந்து இறந்து பேதைகளாகவே மடிகிறார்கள். இதை சித்தர் நெறி மட்டுமே உலகுக்கு அறிவிக்கிறது.

இல்வாழ்க்கையை செப்பனிட காமம் என்பதே காரணமாக அமைவது போல துறவற வாழ்க்கையை செப்பனிடவும் இந்த காமமே காரணமாக உள்ளது. ஒரு ஆண்மையற்றவன் இல்லறத்தை எடுத்துச் செல்ல முடியாது. காமம் என்பது பூமி தேவியின் ஒப்பற்ற பரிசாகும். இதைக்கண்டு பயப்படுபவர்களும், வெறுப்பவர்களும் நிறை நிலையைக் காணமுடியாது.

முருகப் பெருமாளை சற்று கோபக்காரணாகவே புராணம் சித்தரிக்கும். இதுவும் முற்றிலும் உண்மையே! காமம் எரிக்கப்படும் போது உள்ளே கோபக்கனல் அதிகமாகிறது. துர்வாச முனிவரிடம் காமம் அறவே இல்லை. அனைத்தையும் எரித்துவிட்டார். ஆனால் அவரிடம் அளவு கடந்த கோபம் இருந்தது. எந்த முனிவராக இருந்தாலும் கோபம் இல்லாதவராக இருக்கவே முடியாது. இதனால் தான் வள்ளுவ ஆசான் நீத்தார் பெருமை அதிகாரத்தில் குணக் குன்றாக இருக்கும் ஞானிகளுக்கு குணமென்னும் குன்றேறி நிற்கும் செம்மல்களுக்கு கோபம் வரும் போது கணமேயும் காத்தல் அரிது என்கிறார்.

அந்த கோபம் வந்ததன் நோக்கத்தை கணப்பொழுதில் காரியமாக்கி விடும் என்கிறார். உள்ளுடம்பின் கோபம் என்பது வேறு மனிதனுக்கு மனதின் மூலம் வரும் கோபம் என்பது வேறு. இது சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி என்பார் வள்ளுவர். ஞானியர்கள் கோபம் உள்ளுடம்பு மூலம் வரும் கோபமாகும். முருகன் மாம்பழத்திற்கு கோபப்பட்டார் பழனி மலை உருவானது. ஒருகோபம் ஒன்றை உருவாக்கினால் அது ஞானியர் கோபம், ஒரு கோபம் ஒன்றை அழித்தால் அது மனித கோபம். கண்ணகி கோபம் மதுரையை அழித்தது, சீதாப்பிராட்டி கோபம் இலங்கையை அழித்தது. முருகப்பெருமானின் கோபம் சூரபத்மனை இரண்டு கூறுகளாக ஆக்கி மயிலாகவும் சேவற்கொடியாகவும் ஆக்கியது.

உள்ளுடம்பை காமத்தை எரிப்பது மூலம் உண்டாக்கி விட்டால் அதன் மூலம் "கற்கலாம், பேசலாம், கண்ணாரக் காணலாம், முற்றுடம்பால் ஆய உணர்வு" என ஒளவை கூறுவது போல அந்த உடல் மூலம் நமது பருவுடலில் வந்த நோய்களை குணப்படுத்த முடியும், இந்த உடலில் உண்டாகும் வயோதிகத்தை மாற்ற முடியும். அடுத்த பல ஆயிரம் ஆண்டுகள் இதே போன்று பருவுடலை எடுத்துக் கொள்ளவும் முடியும். இது அனைத்தும் காமத்தை எரிப்பதன் மூலமே பெற முடியும். எனவே காமத்தை கழி, கழி என்று வீணாக வெளியே கழித்து விட்டால் உள்ளுடம்பு உருவாகமலே செத்துப் போனவர் ஆகிவிடுவார். எனவே காமம் என்பது சந்ததியை உருவாக்க மட்டுமல்ல, சந்ததியாகவே வாழுவதற்கு வகை செய்யவே.

இது வரை எத்தனையோ ரகசியங்கள் சித்தர்கள் மூலம் வெளிவந்த போதிலும் காமத்தின் மூலம் உள்ளுடம்பை பெறும் ரகசியம் இப்போது தான் சிவலயத்தின் மூலம் வெளிப்படுகிறது என்பது வெள்ளிடை மலையாகும். காரணம் ஞானம் வெளிப்படத் தொடங்கிய காலம் பிறந்து விட்டது. பலரும் உலகம் அழியப் போகிற நிலைக்கு வந்ததாக புலம்பி தவிக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. கடவுள் வெளிப்படும் காலம் வந்துவிட்டது. அனைவரும் சர்வ சாக்கிரதையோடு யோகம் பயின்று ஞானவர்களாக மாறமுடியும் தருணம் வந்துவிட்டது.

காமத்தால் சீரழியும் உலகம் காமத்தாலேயே ஞானம் பெறும் நிலை வெகு தூரத்தில் இல்லை. மனித மனநிலையில் சற்று மடைமாற்றம் கண்டால் நிச்சயம் நாலை மானுடம் வெல்லும் காமத்தை மனிதன் கையில் ஒப்படைத்து ஐம்புலனிடம் அடைக்கலமாக்கினால் மனித இனம் பிணமாகிறது. காமம் ஆன்மாவிடம் ஒப்படைக்கும் போது ஐம்புலன்களுக்கு அவசியம் இல்லாத போது காமமே ஓர் அழகிய அறிவுச்சுடரான முருகப் பெருமான் போன்ற உன்னத தோற்றம் உங்கள் உள்ளேயே ஒளியுடலாக பாதுகாக்கப்படுகிறது. இதைதான் அருளுடம்பு என்பார்கள். இந்த அருளுடம்பு பெற்றவர்கள் எதிலும் தோல்வி காண மாட்டார்கள். இந்த அருளுடம்பை கேமரா மூலம் திருவண்ணாமலை, சதுரகிரி போன்ற தலங்களில் படம் பிடித்த பலரும் உள்ளார்கள். இதுவே வெற்றிக்காண இரகசியமாகும். நீங்களும் அருளுடம்பு பெற வேண்டுமா ஒளியுடலில் வானம் முழுவதும் அறிய வேண்டுமா? வாய்ப்பு உள்ளது.



-Parameshwaran Thangavelu




Anbudan,
Vallalar Groups 
web    :
http://vallalargroupsmessages.blogspot.com
E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
--
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
---
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To post to this group, send email to vallalargroups@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/vallalargroups?hl=en-US.
 
 

--
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
---
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To post to this group, send email to vallalargroups@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/vallalargroups?hl=en-US.
 
 


No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)