Tuesday, October 14, 2008

[vallalargroups:788] Todays thought of vallalar


                     மாயையின் விளக்கம்
திடுக்கற எனைத்தான் வளர்த்திடப் பரையாம்
செவிலிபாற் சேர்த்தனை அவளோ
எடுக்கவும் நினையாள் படுக்கவும் ஒட்டாள்
என்செய்வேன் இன்னும்என் னிடைப்பால்
மடுக்கநற் றாயும் வந்திலள் நீயும்
வந்தெனைப் பார்த்திலை அந்தோ
தடுக்கருங் கருணைத் தந்தையே தளர்ந்தேன்
தனையனேன் தளர்ந்திடல் அழகோ.
1
3544 தளர்ந்திடேல் மகனே என்றெனை எடுத்தோர்
தாய்கையில் கொடுத்தனை அவளோ
வளர்ந்திடா வகையே நினைத்தனள் போன்று
மாயமே புரிந்திருக் கின்றாள்
கிளர்ந்திட எனைத்தான் பெற்றநற் றாயும்
கேட்பதற் கடைந்திலன் அந்தோ
உளந்தரு கருணைத் தந்தையே நீயும்
உற்றிலை பெற்றவர்க் கழகோ.
3545 தாங்கஎன் தனைஓர் தாய்கையில் கொடுத்தாய்
தாயவள் நான்தனித் துணர்ந்து
தூங்கவும் ஒட்டாள் எடுக்கவும் துணியாள்
சூதையே நினைத்திருக் கின்றாள்
ஓங்குநற் றாயும் வந்திலாள் அந்தோ
உளந்தளர் வுற்றனன் நீயும்
ஈங்குவந் திலையேல் என்செய்கேன் இதுதான்
எந்தைநின் திருவருட் கழகோ.
3
3546 அத்தநீ எனைஓர் தாய்கையில் கொடுத்தாய்
ஆங்கவள் மகள்கையில் கொடுத்தாள்
நித்திய மகள்ஓர் நீலிபாற் கொடுத்தாள்
நீலியோ தன்புடை ஆடும்
தத்துவ மடவார் தங்கையில் கொடுத்தாள்
தனித்தனி அவர்அவர் எடுத்தே
கத்தவெம் பயமே காட்டினர் நானும்
கலங்கினேன் கலங்கிடல் அழகோ.
4
3547 வாங்கிய செவிலி அறிவொடும் துயிற்ற
மகள்கையில் கொடுத்தனள் எனைத்தான்
ஈங்கிவள் கருத்தில் எதுநினைத் தனளோ
என்செய்வேன் என்னையே உணர்ந்து
தூங்கவும் ஒட்டாள் அடிக்கடி கிள்ளித்
தொட்டிலும் ஆட்டிடு கின்றாள்
ஏங்குறு கின்றேன் பிள்ளைதன் அருமை
ஈன்றவர் அறிவரே எந்தாய்.
5
3548 வலத்திலே செவிலி எடுத்திடச் சோம்பி
மக்கள்பால் காட்டிவிட் டிருந்தாள்
மலத்திலே உழைத்துக் கிடந்தழல் கேட்டும்
வந்தெனை எடுத்திலார் அவரும்
இலத்திலே கூடி ஆடுகின் றனர்நான்
என்செய்வேன் என்னுடை அருமை
நிலத்திலே அவர்கள் அறிந்திலார் பெற்றோய்
நீயும்இங் கறிந்திலை யேயோ.
6
3549 தும்மினேன் வெதும்பித் தொட்டிலிற் கிடந்தே
சோர்ந்தழு திளைத்துமென் குரலும்
கம்மினேன் செவிலி அம்மிபோல் அசையாள்
காதுறக் கேட்டிருக் கின்றாள்
செம்மியே மடவார் கொம்மியே பாடிச்
சிரித்திருக் கின்றனர் அந்தோ
இம்மியே எனினும் ஈந்திடார் போல
இருப்பதோ நீயும்எந் தாயே.
7
3550 துருவிலா வயிரத் தொட்டிலே தங்கத்
தொட்டிலே பலஇருந் திடவும்
திருவிலாப் பொத்தைத் தொட்டிலிற் செவிலி
சிறியனைக் கிடத்தினள் எந்தாய்
பிரிவிலாத் தனிமைத் தலைவநீ பெற்ற
பிள்ளைநான் எனக்கிது பெறுமோ
கருவிலாய் நீஇத் தருணம்வந் திதனைக்
கண்டிடில் சகிக்குமோ நினக்கே.
8
3551 காய்ந்திடு மனத்தாள் போன்றனள் சிறிதும்
னிவிலாள் காமமா திகளாம்
பாய்ந்திடு வேடப் பயல்களால் எனக்குப்
பயம்புரி வித்தனள் பலகால்
தேய்ந்திடு மதிஎன் றெண்ணினாள் குறையாத்
திருமதி எனநினைந் தறியாள்
சாய்ந்தஇச் செவிலி கையிலே என்னைத்
தந்தது சாலும்எந் தாயே.
9
3552 ஞானஆ னந்த வல்லியாம் பிரியா
நாயகி யுடன்எழுந் தருளி
ஈனம்ஆர் இடர்நீத் தெடுத்தெனை அணைத்தே
இன்னமு தனைத்தையும் அருத்தி
ஊனம்ஒன் றில்லா தோங்குமெய்த் தலத்தில்
உறப்புரிந் தெனைப்பிரி யாமல்
வானமும் புவியும் மதிக்கவாழ்ந் தருள்க
மாமணி மன்றில்எந் தாயே.
10
 
dear friends Kindly discuss this 10poems i need explanations



Add more friends to your messenger and enjoy! Invite them now.

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)