Wednesday, October 8, 2008

[vallalargroups:766] Re: Hi

Dear Sarathy and friends,

Sarathy made a great point. I did not provide much poem references
from Mahan Vallalar. I will quote Mahan's poems and writings in my
next mail. So it will be supporting references for the article
previously forwarded.

Prayers,
Dhanapal

2008/10/7 Dhanapal Thirumalaisamy <dhanapal.thirumalaisamy@gmail.com>:
> I also would like to inform that: this article is the answer to the
> query: what does sirchabai means.
>
> Prayers,
> Dhanapal
>
>
> 2008/10/7 Dhanapal Thirumalaisamy <dhanapal.thirumalaisamy@gmail.com>:
>> Dear Mr. Sarathy,
>>
>> I would like to inform that, the material I have written is based on
>> Vallalar and other siddhas only. By the way, I have written about
>> gnana marga and NOT yoga marga. In yoga marga, kundalini is followed
>> based on physical body mooladhara. But what I have written is a
>> different kundalini. This is the path our Mahan Vallalar followed and
>> our ancient siddhas followed. In the outset, it does look like yoga
>> marga, but, probably you might have noticed that, there is much more
>> meaning in the silence between the words. I have not told anything
>> explicitly about the practices because it is divine secret and has to
>> be taken from Guru.
>>
>> There are no explicit references about the practices Mahan Vallalar
>> taught. Or I would say, we were not able to see it. That does not mean
>> he did not practice any methods. What he followed and taught is, what
>> I have given it as substance. This upto what I have got and there is
>> much much more.
>>
>> You may please refer Arutpas and you can see the references to it. He
>> always talked about Thiruvadi. What I have written is about Thiruvadi.
>> In Thiru arupta urai nadai, Mahan says : "Refer the first chapter of
>> Thirukural. It contains divine secrets. Please get it from Guru". You
>> may please refer Kadavul Vaalthu" in Kural. What is the divine secret
>> it contains? Out of 10 kurals, it talks about "Adi" or "padam" or
>> thiruvadi, in 7 kurals, to attain the mukthi or piravaamai. What does
>> thiruvadi mean? Thats what I have written in my article.
>>
>> In one of the arutpa, Mahan says: "thiruvadi enran thalaiyil
>> vaithu...". He indicates, thiruvadi is present in the head. But what
>> it is and where it is? Thats what the article tries to convey.
>>
>> Hope I answered your queries and you may please ask if you have any.
>>
>> Prayers,
>> Dhanapal
>>
>>
>>
>>
>>
>>
>>
>>
>>
>>
>> 2008/10/7 M.Sarathy Mohan <dmsarate@gmail.com>:
>>> Dear Dhanapal,
>>> I am very pleased about your knowledge in yoga
>>> marga. Please dont mistaken me .I would like to inform you that this subject
>>> is no way related to our Sudha sanmarga.This is not Sidhar marga or Yoga
>>> marga ...This is beyond all.The way ramlainga expressing is diffterent
>>> subject.Please manipulate the things with the help of Thiruarutpa bocos it
>>> is the only source of wisdom for Sudha sanmarga practiceners.if you
>>> manupulate the subjects with the help of thiruartpa that would be really
>>> great.
>>> With love
>>> Mohan Sarathy
>>>
>>>
>>> 2008/10/7 Dhanapal Thirumalaisamy <dhanapal.thirumalaisamy@gmail.com>
>>>>
>>>> தொடர்ச்சி.......
>>>>
>>>> நண்பர்களே, அண்டத்தில் இப்போது பார்ப்போம். இந்த உலகம் உய்வத‌ற்கு மிக
>>>> முக்கிய கிரகங்கள் சூரியன் மற்றும் சந்திரன். சூரியன் உயிருக்கு
>>>> ஆதாரமாகவும் சந்திரன் மனதிற்கு ஆதாரமாகவும் உள்ளன. உயிர்கள் தோன்றவும்
>>>> அவற்றை பராமரிக்க தேவையான வற்றையும் உருவாக்குவது இவை தான். சந்திரன்
>>>> பெண் அம்சமாக கூறப்படுகிறது. ஏன்? பெண்களின் பருவ மாற்றஙகளுக்கு
>>>> சந்திர‌னே காரணம். மாதவிடாய் சுழற்சிக்கும் சந்திரனின் சுழற்சிக்கும் மிக
>>>> நெருங்கிய தொடர்பு உண்டு.
>>>>
>>>> சாதகத்தில் ராசி சக்கரம் என்ற ஒன்று உண்டு. ரா என்பது ராகுவையும் சி
>>>> என்பது சிகி அல்லது கேதுவையும் குறிக்கும். சாதகத்திற்கு குண்டலி என்ற
>>>> பெயர் உண்டு. நண்பர்களே ராகு, கேது ஆகியவை இரண்டாக இருந்தாலும் அவை ஒரு
>>>> பாம்பிலிருந்து உண்டானவை. பாம்பு எங்கிருந்தாலும் அது குண்டலியை
>>>> குறிக்கும். சரி, ராகு கேது எங்கே உள்ளன? சாதகம் என்ன கூறுகிறது? சூரியன்
>>>> , சந்திரன் ஆகியவற்றின் பாதைகளின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஏற்படும்
>>>> வெட்டு புள்ளிகள் என்கின்றது. நிழல் கிரகஙகள் என்கின்றது. மகரிஷி அவர்கள்
>>>> சூரியனின் கரும் புள்ளிகளிலிருந்து வரக்கூடிய அலைகள் என குறிப்பிட்டு
>>>> கூறுகிறார். ராகு கேது ஆகியவையே ஆன்மீக முன்னேற்றத்திக்கு காரணமாகவும்
>>>> முக்திக்கு அடிப்படையாகவும் அமைவதாக சாதகத்தில் கூறப்படுகிறது. ராகு கேது
>>>> இவை சூரிய சந்திரனை சார்ந்தே அமைந்துள்ளது. ஆக குண்டலிக்கும் சூரிய
>>>> சந்திரர்களுக்கும் ஏதோ தொடர்பு உள்ளதல்லவா? இட பிங்கலை, சுழுமுனை நாடிகளை
>>>> ஆசான் மூலம் தெரிந்து கொண்டால் குண்டலி அல்லது சிற்சபையை அல்லது
>>>> திருவடியை அறிந்து கொள்ளலாம்.
>>>>
>>>> நண்பர்களே, "உன்னையே நீ அறிவாய்" என பேரறிஞர்கள் கூறுகின்றனர். சரி,
>>>> எங்கு அறிவது? எப்படி அறிவது? இதற்கு அவர்கள் பதில் என்ன? தத்துவ விசாரணை
>>>> செய்து கொண்டு இரு. ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்விகளை எழுப்பு. ஒரு
>>>> நாள் உன்னை நீ அறிந்து விடுவாய் என கூறுகின்றது. நாம் கேள்விகளை கேட்டு
>>>> கொண்டு இருந்தால் மட்டும் போதாது. அதற்குள்ஆயுள் முடிந்து விடும்.
>>>> "தன்னை அறியும் தளம் எது" என தெரிய வேண்டும். ஆசான் காட்டி கொடுக்க கூடிய
>>>> "புருவ நடு"வே (ஆக்னா) தன்னை அறியும் தளம் ஆகும்.
>>>>
>>>> ஊதியறி வாய்கொண்டு ஊதிப்பாரு,
>>>> உள் பத்திக் கொண்டுதடா தானே தானாய்,
>>>> ஊதியறி வாயறிய மாட்டாயானால்
>>>> உன்னாணை ஊதிபங்க ளொன்றுமில்லை
>>>> "ஊதுகிற வூத்தறிந்தா லவனே சித்தன்"
>>>>
>>>> "ஊதிஅறி வாய்" - அடுப்பிலே உள்ள அனலை நன்றாக மூட்ட ஊது கோல் கொண்டு
>>>> ஊதுகிறோம் அல்லவா? அதைப்போல மூலாக்கினியை ஊதும் கோலாகிய சுழுமுனை நாடியை
>>>> அறிந்து அதன் மூலம் பிராணாயாம பயிற்சி செய்ய முடிவில் தன்னை அறிவோம்.
>>>>
>>>> "தன்னை யறியு மறிவு தனைப்பெறில்
>>>> பின்னைப் பிறப்பில்லை வீடு" - அவ்வை ஞான குறள்
>>>>
>>>> தன்னை அறியும் அறிவை பெறுவது என்பது இட பிங்கலை சுழுமுனை நாடிகள் எதுவென
>>>> தெரிந்து கொள்வதே ஆகும்.
>>>>
>>>> எரு வாய்க்கு இரு விரல்கடை மேலே
>>>> கரு வாய்க்கு இரு விரல்கடை கீழே
>>>> உரு விடும் சோதியை உல்க வல்லானை
>>>> கரு விடும் சோதி கலந்து நின்றானே
>>>>
>>>> எரு வாய்க்கு =
>>>> நண்பர்களே, நம் உடம்பில் ஒன்பது வாயில் உள்ளன என்பதை அறிவோம். எல்லா
>>>> வாயில்களுமே கழிவை வெளியேற்ற தான் செய்யும். மூக்கின் வழியாக சளி
>>>> வருகிறது. கண்ணின் வழியாக பீழை வருகிறது. காதின் வழியாக கசடு வருகிறது.
>>>> ஆக, இது எந்த எருவாய் நண்பர்களே? பத்தாவது வாயிலாகிய மூல வாசல் தான்.
>>>> குண்டலியாகிய அடுப்பில் மூலாக்கினி எரிந்து கொண்டு இருக்கிறது. அதை
>>>> துருத்தி விடும் துருத்தியாக உள்ளது இட பிங்கலை சுழுமுனை நாடிகள்.
>>>> அடுப்பின் எரிவாயில் வழியாக நாம் விறகை, காற்றை அனுப்புவோம்.
>>>> மூலாக்கினியின் எரிவாயில் (எரு வாய் = இட பிங்கலை சுழுமுனை நாடிகள்)
>>>> வழியாக நாம் பிராண வாயுவை அனுப்ப, மூலாக்கினி பிரகாசமாய் சுடர் விட்டு
>>>> எரியும்.
>>>>
>>>>
>>>> 2008/10/6 Dhanapal Thirumalaisamy <dhanapal.thirumalaisamy@gmail.com>:
>>>> > Dear Mr.Karthikeyan,
>>>> >
>>>> > I have sent two messages to the group. I am not seeing them in the
>>>> > group. Looks like they were filtered. Could I know the reason?
>>>> >
>>>> > Thanks,
>>>> > Dhanapal
>>>> >
>>>> >
>>>> > 2008/10/5 Dhanapal Thirumalaisamy <dhanapal.thirumalaisamy@gmail.com>:
>>>> >> குண்டலி - சித்தர்களின் பார்வை
>>>> >> குண்டலி என நமது சித்தர்களால் வழங்கப்பட்ட இந்த பொருளுக்கு பல்வேறு பரி
>>>> >> பாசை பெயர்கள் உண்டு. அவற்றுள் சிலவற்றை காண்போம்.
>>>> >> -திருவடி, வன்னி, வாலை, வாசி, அகர உகரங்கள், லிங்கம், மயிர் பாலம்,
>>>> >> வெட்டாத சக்கரம், திருவாடுதுறை, புருவநடு, இரவு பகல் அற்ற இடம், இரவு
>>>> >> பகல் தோன்றும் இடம், சிற்சபை, ஓம், மூலாதாரம், மூல துவாரம், துவாரகை, ஹரி
>>>> >> துவார், ஈசன் நுழை வாசல் இன்னும் பல பெயர்கள். ஞாபகத்திற்கு வந்தவை இவை.
>>>> >>
>>>> >> நன்றாக கவனித்து பார்த்தீர்களானால் ஒவ்வொரு பெயரும் மிக்க அர்த்தத்தை
>>>> >> கொண்டுள்ளவை. இந்த தொடரில் ஒவ்வொன்றாக என்னால் முடிந்த வரை சித்தர்கள்
>>>> >> பார்வையாக நான் என்ன பார்க்கிறேன் என்பதை இந்த கட்டுரை சொல்லும்.
>>>> >>
>>>> >> அகத்தியரின் "துறை அறி விளக்கம்" என்ற நூல் பழங்காலமாக ஞானாசிரியர்களின்
>>>> >> கைகளில் மட்டும் தவழ்ந்து கொண்டு இருந்தது. இன்னுமே அது ரகசியமாக தான்
>>>> >> உள்ளது. இந்த நூலில் சுமார் 100 பாடல்களுக்கு மேல் உள்ளது. இவை முழுக்க
>>>> >> முழுக்க குண்டலி பற்றி மட்டுமே பாடக்கூடியவை. அதில் இருந்து ஒரு பாடல்.
>>>> >> கைவசம் மூல நூல் இல்லாததால் ஞாபகத்திற்கு வந்த வரிகள் இங்கே.
>>>> >>
>>>> >> "யாரும் அறிவார்கள் ஒன்பது வாசல் யாரும் அறியார்கள் ஓர் வாசல்
>>>> >> அது கடையோர முன்வாசல்......"
>>>> >> ".....மூல முதல் ஆறு தளம் கீழே தள்ளி முதிர்ந்து நின்ற மேல் ஆறு தளத்தை
>>>> >> நோக்கி...."
>>>> >>
>>>> >> நாம் அனைவரும் ஆறு ஆதாரங்கள் உள்ளன என்பதை அறிவோம். அவை மூலம் முதல்
>>>> >> துரியம் வரையாக உள்ளது. ஆனால் நம் உடம்பில் 12 ஆதாரங்கள் உள்ளன என்பதை
>>>> >> அறிவீர்களா? மேல் உள்ள பாடலில் "முதிர்ந்து நின்ற மேல் ஆறு தளத்தை
>>>> >> நோக்கி" என்ற வரி குறிப்பது அதுவே. பரஞ்சோதி அவர்களின் "நான் கடவுள்"
>>>> >> என்ற புத்தகத்தில் மூளையை சுற்றி ஆறு உறைகள் உள்ளதாகவும் அவையே மேல் ஆறு
>>>> >> ஆதாரங்கள் என்றும் அவற்றின் மீதே முழுக்க முழுக்க தவம் செய்ய வேண்டும் என
>>>> >> கூறுகிறார். அவரின் பயிற்சி முறைகளில் மூலாதாரம், ஆக்ஞை மட்டுமே உள்ளது.
>>>> >> மற்று இடைப்பட்ட ஆதாரங்கள் தவ பயிற்சி கிடையாது.
>>>> >>
>>>> >> மேலே உள்ள அகத்தியர் பாடலில் "முதிர்ந்து நின்ற மேல் ஆறு தளத்தை நோக்கி"
>>>> >> என கூறுவதும் இதை பற்றி தான்.
>>>> >>
>>>> >> மேலும் சில பெயர்கள்:
>>>> >> ஊசி முனை வாசல், நெற்றிக்கண், முப்பு, நடராஜர், திருசிற்றம்பலம்,
>>>> >> சுழுமுனை , கரிமுகன்.
>>>> >>
>>>> >> சரி, நல்லது, இவ்வளவு பெயர்களை தெரிந்து கொள்வதால் என்ன பயன்? நமது
>>>> >> மஹரிஷி அவர்கள் தான் எல்லாவற்றையும் சொல்லி விட்டாரே. இதற்கு மேலும் நாம்
>>>> >> மற்ற சித்தர்கள் பாடல்களை ஆராய்ச்சி செய்ய வேண்டுமா? என்ன புதிதாக
>>>> >> தெரிந்து கொள்ள போகிறோம் வேதாதிரியத்தில் இல்லாதது என்ன? வேதாத்திரியம்
>>>> >> சொல்லாத பொருள் ஏதேனும் உள்ளதா என்ன? இந்த ஐயம் உங்களுக்கு எழலாம். உண்மை
>>>> >> தான். ஆயினும் "கற்றது கைம்மண்" என்பதால் நான் அறிந்து கொண்ட பல
>>>> >> பொருள்களை பரிமாற்றம் கொள்ள ஒரு வாய்ப்பு. இந்த கேள்விக்கான பதிலை இந்த
>>>> >> தொடரின் இறுதியில் தெரிந்து கொள்வீர்கள்.
>>>> >>
>>>> >> நண்பர்களே, இக்கட்டுரையில் நான் அவ்வையின் ஞான குறள், விநாயகர் அகவல்,
>>>> >> சிவ வாக்கியர் பாடல்கள், அகத்தியர் பாடல்கள் , குடம்பை சித்தர்,
>>>> >> பட்டினத்தார் பாடல்கள், திருமந்திரம், திருஅருட்பா, திருக்குறள், ஞான
>>>> >> ரத்தின குறவஞ்சி மற்றும் பல நூல்களில் இருந்து குண்டலி பற்றிய செய்திகளை
>>>> >> கொடுக்க முயல்கிறேன். பல உண்மைகளையும் தகவல்களையும் உணர்ந்து
>>>> >> கொள்வீர்கள்.
>>>> >> நான் இங்கு மேல்கொளாக கொடுக்க இருப்பது நம் தமிழகத்தில் மிக சிறப்பான
>>>> >> இடத்தை பெற்றுள்ள சித்தர்களின் பாடல்களை மட்டுமே.
>>>> >>
>>>> >> நமது உடம்பில் சூரிய மண்டலம், சந்திர மண்டலம், அக்னி மண்டலம் என மூன்று
>>>> >> மண்டலங்கள் உள்ளன. இவை முறையே பிங்கலை, இடகலை, சுழுமுனை ஆகிய நாடிகளால்
>>>> >> குறிக்க படுகின்றன..
>>>> >>
>>>> >> ஒரு அவ்வையின் விநாயகர் அகவல் பாடலை பார்ப்போம்.
>>>> >>
>>>> >> "இடைபிங்கலையின் எழுத்து அறிவித்து
>>>> >> கடையிற் சுழுமுனை கபாலமும் காட்டி
>>>> >> மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
>>>> >> நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்தி..."
>>>> >>
>>>> >> நமது ஆன்மிக பயணம் இந்த நாடிகளை சார்ந்தே அமைந்துள்ளன.
>>>> >>
>>>> >> நமது உடம்பில் ஒன்பது வாயில்கள் உள்ளன என்பதை அறிவோம். எங்கெங்கெல்லாம்
>>>> >> வாயில் உள்ளனவோ அங்கெல்லாம் வாயு செல்லும். நமது உடம்பில் ஈசன் நுழை
>>>> >> வாயில் அல்லது ஊசி முனை வாசல் அல்லது மூல துவாரம் என அழைக்க படக்கூடிய
>>>> >> ஒரு வாசல் உள்ளது. இந்த வாசலின் வழியாக பிராண வாயுவை கும்பகம் ரேசகம் என
>>>> >> பயிற்சி செய்வதையே பிரணாயாம பயிற்சி என நம் முன்னோர்கள் கொடுத்தார்கள்.
>>>> >> மூக்கின் வழியாக மூச்சை இழுத்தி நிறுத்தி பின் விடுவது அல்ல இந்த
>>>> >> பயிற்சி. இந்த பயிற்சி மூல வாயிலின் வழியாக செய்ய வேண்டியது.
>>>> >>
>>>> >> நமது உடம்பில் எல்லா இயக்கங்களுமே பல வாயுக்களை அடிப்படியாக கொண்டது.
>>>> >> உணவை செரிக்க ஒரு வாயு, குரல் எழுப்புவது ஒரு வாயு, கழிவுகளை வெளியே
>>>> >> தள்ளுவது அபான வாயு இன்னும் பல. தனஞ்சய வாயு என்ற வாயு ஒன்று உண்டு.
>>>> >> உயிர் பிரியும் போது இந்த வாயு உடலை விட்டு வெளியேறுகிறது. இந்த வாயு
>>>> >> உடலில் இருக்கும் வரை மட்டும் தான் உயிர் இந்த உடம்பில் இருக்கும்.
>>>> >>
>>>> >> இப்போது அவ்வையின் பாடலை பார்ப்போம்.
>>>> >>
>>>> >> இறைவன் அவ்வைக்கு குருவாக வந்து தீக்ஷை அளித்ததாக விநாயகர் அகவல்
>>>> >> பாடல்கள் எழுத பட்டு இருக்கும்.
>>>> >>
>>>> >> "இடைபிங்கலையின் எழுத்து அறிவித்து..."
>>>> >>
>>>> >> இடை பிங்கலை என்ற நாடிகளை வலது இடது சுவாச மூச்சு குழல்களை குறிப்பதாக
>>>> >> இந்த உலகம் கூறுகிறது. அப்படியாயின் அதை அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.
>>>> >> மிக தெளிவாக தெரிந்த ஒரு விசயமாகி விடும் இல்லையா? அதுவும் இறைவன் வந்து
>>>> >> தான் காட்டுகிறானாம்.
>>>> >>
>>>> >> "கடையிற் சுழுமுனை கபாலமும் காட்டி.."
>>>> >>
>>>> >> "சுழுமுனை கடையில் கபாலமும் காட்டி " என இதை படிக்க வேண்டும்.
>>>> >> கபாலம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அது என்ன சுழுமுனை கடையில் கபாலம்
>>>> >> காட்டுவது?
>>>> >>
>>>> >>
>>>> >> நமது உலகிற்கு சூரியன், சந்திரன், அவற்றில் இருந்து தோன்றும் அக்னி ஆகிய
>>>> >> மூன்றும் மிக அடிப்படையானது. அவற்றிற்கு என்ன என்ன நிகழ்ச்சிகள்
>>>> >> நடக்கிறது? உதயம், அஸ்தமனம், அமாவாசை, பௌர்ணமி, கிரகணம் ஆகிய
>>>> >> நிகழ்ச்சிகள்.
>>>> >> அண்டத்தில் நடக்கும் இந்த நிகழ்ச்சிகளை பிண்டத்திலும் செயல் படுத்துவதே
>>>> >> நாம் செய்ய கூடிய ஆன்மிக பயிற்சிகளின் நோக்கம்.
>>>> >>
>>>> >> இட கலை = சந்திரன்
>>>> >> பிங்கலை = சூரியன்
>>>> >> அக்னி கலை = சுழுமுனை
>>>> >>
>>>> >> இந்த மூன்று நாடிகளின் வழியாக அமாவாசை, பௌர்ணமி, கிரகணம் ஆகியவற்றை
>>>> >> உருவாக வேண்டும்.
>>>> >>
>>>> >> சரி எவ்வாறு உருவாக்குவது? காற்றின் மூலம். அதுவே "பிராண யாம பயிற்சி" என
>>>> >> முன்னோர்கள் கொடுத்துள்ளனர். இது இரு மூக்கு துளைகளின் வழியாக காற்றை
>>>> >> இழுத்து நிறுத்தி வெளிவிட்டு செய்யும் பயிற்சி அல்ல.
>>>> >>
>>>> >> "மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின…"
>>>> >>
>>>> >> மூன்று மண்டலம் என்பது சூரிய, சந்திர, அக்னி மண்டலங்களை குறிக்கிறது.
>>>> >>
>>>> >> இந்த மூன்று மண்டலங்களை முட்டி நிற்கும் தூண் எது? நான்றெழு பாம்பு
>>>> >> என்கிறார் அவ்வை. பாம்பு என்பது குண்டலியை குறிக்கும்.
>>>> >>
>>>> >> இந்த பாடலில் இருந்து குண்டலி என்பது இட பிங்கலை சுழுமுனை நாடிகளுக்கு
>>>> >> அருகிலும் ஊடுருவியும் இருப்பதாக புலப்படுகிறது.
>>>> >>
>>>> >>
>>>> >> நண்பர்களே, கீழ் வரும் பாடல்களை கவனியுங்கள்.
>>>> >>
>>>> >> "ஈரைந்து வாசலில் மயங்கிய வாயுவை
>>>> >> ஈசன்தன் வாயிலில் ஏற்று"
>>>> >> -அவ்வை குறள்
>>>> >>
>>>> >> "மூலத்து வாரத்து மூளு மொருவனை
>>>> >> மேலைத் துவாரத்து மேலுற நோக்கிமுற்
>>>> >> காலுற்றுக் காலனைக் காய்ந்தங் கியோகமாய்
>>>> >> ஞாலக் கடவூர் நலமா யிருந்ததே."
>>>> >> -திருமந்திரம்
>>>> >>
>>>> >> "புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
>>>> >> நெறிப்பட வுள்ளே நின் மலமாக்கி(நிர்மலமாக்கி)
>>>> >> லுறுப்புச் சிவக்கும் ரோமங் கறுக்கும்
>>>> >> புறப்பட்டுப் போகான் புரிசடையோனே."
>>>> >> -திருமந்திரம்
>>>> >>
>>>> >> முதல் பாடல் ஈசன் வாயில், இரண்டாவது பாடல் மூல துவாரம் என குறிக்கப்பட
>>>> >> கூடிய இந்த வாசலின் வழியாக பிராண வாயுவை ஏற்ற வேண்டும். சித்தர்கள்
>>>> >> "கால்" என்ற வார்த்தையை காற்றை குறிக்க உபயோக படுத்தி இருப்பார்கள்.
>>>> >>
>>>> >> இரண்டாவது பாடல் = "காலுற்ற..."
>>>> >>
>>>> >> மேற்கண்ட பாடல்களிலிருந்து இட பிங்கலை, சுழுமுனை நாடிகளின் வழியாக
>>>> >> வாயுவைப் பொருந்தி பயிற்சிகள் செய்ய சொல்வதாக தெரிகிறது.
>>>> >>
>>>> >> ஈரைந்து வாசலில்….
>>>> >> நன்றாக கவனியுங்கள். ஈரைந்து = இரு + ஐந்து. = பத்து. அவ்வை பத்து
>>>> >> வாயில்களை சொல்கிறார். என்ன இது? ஒன்பது வாயில் தானே நமக்கு தெரியும்?
>>>> >> அது என்ன பத்தாவது வாயில்? அதுவே ஈசன் வாயில் அல்லது மூல துவாரம்.
>>>> >>
>>>> >> சரி ஈசன் வாயிலில் எப்படி பிராண வாயுவை ஏற்றுவது?
>>>> >>
>>>> >> "மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு
>>>> >> மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை"
>>>> >>
>>>> >> நம் மனம் எங்கெங்கெல்லாம் பாய்கிறதோ அங்கெல்லாம் பிராண வாயு பாயும். எனவே
>>>> >> மனதாலே ஈசன் வாயிலை நினைத்தால் பிராண வாயு ஏறும்..
>>>> >>
>>>> >>
>>>> >> இடைபிங்கலையின் எழுத்து அறிவித்து ...
>>>> >> நண்பர்களே, அதென்ன இட பிங்கலையின் எழுத்து?
>>>> >> நம் தமிழ் ஒரு மிகப்பெரிய சிறப்பம்சம் உண்டு. அது என்ன வென்றால் மொழியின்
>>>> >> எழுத்துக்களிலே இறைவனை பற்றிய ரகசியங்களை விட்டு சென்ற மொழி தமிழ் மொழி
>>>> >> மட்டும் தான். உயிர் எழுத்து, மெய் எழுத்து ஆகிய இரண்டு வகைகள் மட்டுமே
>>>> >> பொதுவாக உண்டு. இவை இரண்டும் ஒட்டாமல் தனி தனியாக உள்ளன. ஆனால் தமிழ்
>>>> >> மொழியில் உயிர்மெய் எழுத்துக்கள் உண்டு. உயிரும் மெய்யும் ஒன்றோடொன்று
>>>> >> கலந்து இயங்குவதை எழுத்துக்களிலேயே விட்டு சென்று விட்டனர். அது மட்டுமா?
>>>> >> ஆயுத எழுத்து என சொல்ல கூடிய ஃ என்ற எழுத்து தமிழில் மட்டும் தான்
>>>> >> உள்ளது. நண்பர்களே, இந்த எழுத்து ஒரு உபயோகம் இல்லாத எழுத்து என எத்தனை
>>>> >> பேர் நினைந்து இருப்பீர்கள்? நான் கூட ஆரம்பித்தில் அப்படி தான்
>>>> >> நினைத்தேன். உடல், உயிர் ஆகியவற்றை பார்த்து விட்டோம். ஆனால் ஆன்மாவை
>>>> >> காணோமே? ஃ ஆன்மாவை குறிக்கிறது நண்பர்களே. அது உடலோடும் உயிரோடும்
>>>> >> ஒட்டாது தனியே இருக்கிறது. வள்ளலார் ஒரு பாடலில் கூறுவார்.
>>>> >>
>>>> >> "வானத்தில் மயில் ஆட கண்டேன். மயில் குயில் ஆச்சுதடி அக்கச்சி மயில்
>>>> >> குயில் ஆச்சுதடி"
>>>> >>
>>>> >> நாம் தவத்தில் மூல வாசலை திறந்து, ஆழ்ந்து செல்ல செல்ல ஒளி, ஒலி
>>>> >> அனுபவங்களை பெறுவோம். கோயிலில் என்ன நடக்கிறது? கருவறை வாசல் பூசைக்கு
>>>> >> முன் மூடிஇருக்கிறது. வாசல் திறந்ததும் தீபம் காட்டுகிறார்கள். கூடவே
>>>> >> மணியும் அடிக்கிறார்கள். பின் இறைவன் தரிசனம் கிடைக்கிறது. இதுவேதான் நம்
>>>> >> தவத்திலும் நடக்கிறது.
>>>> >>
>>>> >> இப்போது எழுத்துக்கு வருவோம்.
>>>> >>
>>>> >> மேற்சொன்ன வள்ளலார் பாடலில் "அக்கச்சி" என்ற வார்த்தையை கூறிஇருக்கிறார்.
>>>> >> "அக்கச்சி = அக் + ஆச்சி". (ஃ + ஆச்சி). அவர் அக் என சொன்னது இந்த ஆயுத
>>>> >> எழுத்தை தான் நண்பர்களே.
>>>> >>
>>>> >> சரி, இட பிங்கலைகளுக்கு எழுத்து இருக்கிறதா? அப்படியாயின் அவை எந்த
>>>> >> எழுத்துக்கள்?
>>>> >> அ = பிங்கலை
>>>> >> உ = இடகலை
>>>> >> ம் = சுழுமுனை
>>>> >> இந்த மூன்றையும் தவத்தினாலே ஒன்றாக கலந்தால் அதுவே ஓம் ஆகிறது.
>>>> >>
>>>> >> 8-2 தத்துவம் என ஆன்மிகத்தில் உள்ளவர்கள் தேடிக்கொண்டு இருக்கக்கூடிய ஒரு
>>>> >> மிக ரகசியமான தத்துவம் இது.
>>>> >> தமிழில் ௮ -8 ௨ - 2 குறிக்கிறது.
>>>> >>
>>>> >> அவ்வை தன் ஞான குறளில் கூறுவார்.
>>>> >>
>>>> >> "கூறும் பொருள் இது அகர உகாரங்கள்
>>>> >> ...மகரம் குழல் வழி ஓடிட.." என வரும்.
>>>> >>
>>>> >> அது ஏன் கூறும் பொருள் என கூற வேண்டும்? குரு வானவர் இடகலையையும்
>>>> >> பிங்கலையையும் காட்டி கொடுக்க வேண்டும்.
>>>> >> இதையே தான் "இடைபிங்கலையின் எழுத்து அறிவித்து ..." விநாயகர் அகவலில்
>>>> >> கூறுகிறது.
>>>> >>
>>>> >> "குரு வடிவாகி குவலயந்தன்னில்
>>>> >> திருவடி வைத்து..."
>>>> >>
>>>> >>
>>>> >> "கடையிற் சுழுமுனை கபாலமும் காட்டி.." இதன் விளக்கம் பார்ப்போம்.
>>>> >>
>>>> >> "எல்லா கலையும் இடை பிங்கலை நடுச்
>>>> >> சொல்லா நடு நாடி யூடே தொடர் மூலஞ்
>>>> >> செல்லா எழுப்பி சிரத்துடன் சேர்தலால்
>>>> >> நல்லோர் திருவடி நண்ணி நிற்போரே"
>>>> >>
>>>> >> நடு நாடி = சுழுமுனை
>>>> >>
>>>> >> சொல்லா நடு நாடி = ஆசான் மூலம் உணர வேண்டிய நாடி
>>>> >>
>>>> >> நண்பர்களே, நீங்கள் சரஸ்வதி படம் பார்த்து இருப்பீர்கள். அவர் எதில்
>>>> >> அமர்ந்து இருக்கிறார்? ஆயிரம் இதழ் தாமரை மலரில். தாமரை எவ்வாறு
>>>> >> இருக்கிறது? நன்றாக மலர்ந்து விரிந்து இருக்கிறது.
>>>> >>
>>>> >> சுழுமுனையின் இறுதி மலர் போன்ற மூளையில் முடிகிறது. ப்ரஹ்ம ரந்திரம்
>>>> >> என்று சொல்ல கூடியது அது தான். நமது தற்போதைய மூளை மொட்டு போல சுருங்கி
>>>> >> இருக்கிறது. நாம் இந்த நாடிகளின் வழியாக பிராண வாயுவை மேல் ஏற்ற மூளை
>>>> >> மலராக விரிகிறது. அப்போது வெறும் ஹார்மோனை மட்டுமே சுரக்க கூடிய
>>>> >> சுரப்பிகள் அமுதத்தை சுரக்க ஆரம்பிக்கும்.
>>>> >>
>>>> >> சிவ பெருமானுடைய படத்தை பார்த்து இருப்பீர்கள். அவர் தலையில் பாம்பு
>>>> >> இருக்கிறது. அது குண்டலினியை குறிக்கும். பிறை சந்திரன் இருக்கும்.
>>>> >> தலையில் இருந்து அமுத கங்கை வழிந்து கொண்டு இருக்கும்.
>>>> >>
>>>> >> நாம் மூன்று மண்டலங்களை பார்த்தோம். சூரிய மண்டலம், சந்திர மண்டலம்
>>>> >> மற்றும் அக்னி மண்டலம். இந்த பிறை சந்திரன் சந்திர மண்டலத்தை
>>>> >> குறிக்கிறது. பிறையாக இருக்க கூடிய இந்த சந்திரனை முழு மதியாக ஆக
>>>> >> வேண்டும். எவ்வாறு?
>>>> >>
>>>> >> மூன்று நாடிகளும் மூலாதாரத்தில் போய் முடிகிறது. பிராண வாயுவை இந்த
>>>> >> நாடிகளின் மூலம் ஏற்ற ஏற்ற அது மூலாதாரத்தில் மூண்டு எழக்கூடிய மூலக்கனலை
>>>> >> நன்றாக கிளர்ந்து எரிய செய்யும்.
>>>> >> இந்த கனலின் வெப்பம் தாங்காது மூளை மலராக விரியும். சந்திர மண்டலத்தில்
>>>> >> இருக்க கூடிய அமுத கலை அமுதத்தை சுரக்க ஆரம்பிக்கும். அதை தான் சிவனின்
>>>> >> தலையில் இருக்கும் கங்கை குறிக்கிறது.
>>>> >>
>>>> >> மூல நெருப்பை இட்டு முட்டி நிலா மண்டபத்தில்
>>>> >> பாலை இறுக்கி உண்டு பசி ஒழிவது எக்காலம்?
>>>> >> -பத்திரகிரியார்.
>>>> >>
>>>> >> அவ்வை "அமுத நிலை" என்ற ஒரு வார்த்தையை உபோயோக படுத்தி இருப்பதை கீழ்
>>>> >> வரும் பாடலில் கவனியுங்கள்.
>>>> >>
>>>> >> குண்டலி அதனிற் கூடிய அசபை
>>>> >> விண்டு எழும் மந்திரம் வெளிப்பட உரைத்து
>>>> >> மூலாதாரத்தின் மூண்டெழு கனலை
>>>> >> காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே
>>>> >> அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
>>>> >>
>>>> >> குமுத சகாயன் குணத்தையும் கூறி.."
>>>> >>
>>>> >> குமுத சகாயன் = குமுத மலரில் வசிக்க கூடிய இறைவன்.
>>>> >>
>>>> >> நண்பர்களே, குமுத மலருக்கு ஒரு தனி சிறப்பு உண்டு. அது சந்திர ஒளியை
>>>> >> வாங்கி மலரும். இறைவன் சந்திர மண்டலத்தில் வசிக்கிறான் என்பதை இந்த
>>>> >> வாக்கியம் மூலம் மிக எளிதாக விளக்கி விடுகிறார்.
>>>> >> வள்ளுவர் தன் முதல் அதிகாரத்தில்,
>>>> >>
>>>> >> "மலர் மிசை ஏகினான் மானடி சேர்ந்தார்
>>>> >> நிலமிசை நீடு வாழ்வார்"
>>>> >> என கூறுகிறார். இது எந்த மலர் நண்பர்களே? குமுத மலர் தான்.
>>>> >>
>>>> >>
>>>> >>
>>>> >> நண்பர்களே, அண்டத்தில் இப்போது பார்ப்போம். இந்த உலகம் உய்வத‌ற்கு மிக
>>>> >> முக்கிய கிரகங்கள் சூரியன் மற்றும் சந்திரன். சூரியன் உயிருக்கு
>>>> >> ஆதாரமாகவும் சந்திரன் மனதிற்கு ஆதாரமாகவும் உள்ளன. உயிர்கள் தோன்றவும்
>>>> >> அவற்றை பராமரிக்க தேவையான வற்றையும் உருவாக்குவது இவை தான். சந்திரன்
>>>> >> பெண் அம்சமாக கூறப்படுகிறது. ஏன்? பெண்களின் வேறுவேறான பருவ
>>>> >> மாற்றஙகளுக்கு சந்திர‌னே காரணம். மாதவிடாய் சுழற்சிக்கும் சந்திரனின்
>>>> >> சுழற்சிக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு.
>>>> >>
>>>> >> சாதகத்தில் ராசி சக்கரம் என்ற ஒன்று உண்டு. ரா என்பது ராகுவையும் சி
>>>> >> என்பது சிகி அல்லது கேதுவையும் குறிக்கும். சாதகத்திற்கு குண்டலி என்ற
>>>> >> பெயர் உண்டு. நண்பர்களே ராகு, கேது ஆகியவை இரண்டாக இருந்தாலும் அவை ஒரு
>>>> >> பாம்பிலிருந்து உண்டானவை. பாம்பு எங்கிருந்தாலும் அது குண்டலியை
>>>> >> குறிக்கும். சரி, ராகு கேது எங்கே உள்ளன? சாதகம் என்ன கூறுகிறது? சூரியன்
>>>> >> , சந்திரன் ஆகியவற்றின் பாதைகளின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஏற்படும்
>>>> >> வெட்டு புள்ளிகள் என்கின்றது. நிழல் கிரகஙகள் என்கின்றது. மகரிஷி அவர்கள்
>>>> >> சூரியனின் கரும் புள்ளிகளிலிருந்து வரக்கூடிய அலைகள் என குறிப்பிட்டு
>>>> >> கூறுகிறார். ராகு கேது ஆகியவையே ஆன்மீக முன்னேற்றத்திக்கு காரணமாகவும்
>>>> >> முக்திக்கு அடிப்படையாகவும் அமைவதாக சாதகத்தில் கூறப்படுகிறது. ராகு கேது
>>>> >> இவை சூரிய சந்திரனை சார்ந்தே அமைந்துள்ளது. இட பிங்கலை, சுழுமுனை நாடிகளை
>>>> >> ஆசான் மூலம் தெரிந்து கொண்டால் குண்டலி அல்லது சிற்சபை எதுவென்றும்
>>>> >> தெரிந்து கொள்ளலாம்.
>>>> >>
>>>> >>
>>>> >> 2008/10/3 vallalar groups <vallalargroups@gmail.com>:
>>>> >>> Respected Vallalar Devotee.Poornima Meenakshi ,
>>>> >>>
>>>> >>> SICRCHABAI - vallalar mentioned Four Disciplines
>>>> >>>
>>>> >>> In the second discipline he mentioned about sirchabai
>>>> >>>
>>>> >>> கரண ஒழுக்கம்
>>>> >>>
>>>> >>> 1. மனத்தைச் சிற்சபை இடத்தே நிறுத்தல் முதலில் புருவ மத்தியில் நிற்கச்
>>>> >>> செய்தல்
>>>> >>>
>>>> >>> Here SIRCHABHAI - "Puruva mathi"(புருவ மத்தி).
>>>> >>>
>>>> >>>
>>>> >>> Anbudan
>>>> >>> vallalar groups
>>>> >>>
>>>> >>> 2008/10/2 Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>
>>>> >>>>
>>>> >>>> From: Poornima Meenakshi
>>>> >>>> Date: Mon, Sep 29, 2008 at 8:22 PM
>>>> >>>> Subject: My question.
>>>> >>>> To: Karthikeyan J
>>>> >>>>
>>>> >>>> Dear Vallalar Sanmargees,
>>>> >>>>
>>>> >>>> I hav a doubt about SICRCHABAI & PORCHABAI which is situated at the
>>>> >>>> Sathyagyana sabai at Vadalur. I want to know what is exactly situated
>>>> >>>> inside
>>>> >>>> these two mantapas and wat is its meaning and why they are being
>>>> >>>> worshiped?
>>>> >>>>
>>>> >>>> Please do explain me in detail
>>>> >>>>
>>>> >>>> Thanking you
>>>> >>>>
>>>> >>>> from
>>>> >>>> Poornima
>>>> >>>> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
>>>> >>>> தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
>>>> >>>>
>>>> >>>
>>>> >>>
>>>> >>>
>>>> >>> --
>>>> >>> Anbudan,
>>>> >>> Vallalar Groups
>>>> >>>
>>>> >>> அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
>>>> >>> தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
>>>> >>>
>>>> >>> >>>
>>>> >>>
>>>> >>
>>>> >
>>>> >>>>
>>>
>>
>

--~--~---------~--~----~------------~-------~--~----~
To post to this group, send email to vallalargroups@googlegroups.com

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)