Saturday, February 2, 2019

[vallalargroups:6077] ஞானிகள் பற்றற்றிருப்பர்

ஞானிகள் பற்றற்றிருப்பர்

    7.  எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
       பொல்லாப் புழுமலிநோய்ப் புன்குரம்பை-நல்லார்
       அறிந்திருப்பார் ஆதலினால் ஆங்கமல நீர்போற்
       பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு


எல்லாப் படியாலும் - எல்லா வகையாலும், எண்ணினால் - ஆராயுமிடத்து, 
இவ்வுடம்பு - இந்த உடம்பானது, பொல்லாப் புழு-பொல்லாத புழுக்களுக்கும், 
மலி நோய்-நிறைந்த பிணிகளுக்கும், 
புல் குரம்பை - புல்லிய குடிசையாக இருக்கின்றது; 
நல்லார் - நல்லறிவுடையோர், அறிந்திருப்பார் - (இவ்வுடம்பினிழிவை) அறிந்திருப்பார்கள்; 
ஆதலினால்-ஆகையால் (அவர்கள்), கமல நீர் போல் - தாமரை இலையில் தண்ணீர் போல, 
பிறிந்து இருப்பார் - (உடம்போடு கூடியும்) கூடாதிருப்பார்கள்;
 பிறர்க்குப் பேசார் - (அதைக் குறித்துப்) பிறரிடத்தில் பேசமாட்டார்கள், 
ஆம்: அசை.

உடம்பின் இழிவை யறிந்த ஞானிகள் உடம்போடு கூடி இருப்பினும் அதிற் பற்றற்றிருப்பார்கள்

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)