அருளே நம்பொரு லருளே நம்மொளி
அருளே நாமறி வாயென்ற சிவமே.
அருள் அல்லாத பொருள் ஒன்று நமக்கு வேண்டாம்;
ஏன் எனில் அருளே பொருளாவது நாம் கண்டோம்.
அருளே நம் உள்ளுறை ஒளியாகவும்,
அருளே அருட் பெரும் ஜோதி ஆண்டவரை அறிய
வைக்கும் அறிவாகவும் இருக்கிறது என
அருட் பெரும் ஜோதியாம் சிவம் அருளியது.
Be materialistic in order to earn Grace only
as Grace is the only aim of all our pursuits.
It is the Grace which has lit the light in you
and it is the same Grace lit the light of your knowledge of Grace.
அருளே நம்குல மருளே நம்மினம்
அருளே நாமறி வாயென்ற சிவமே.
நாம் யாவரும் அருளின் கருணையால் அவதரித்த ஆன்மாக்கள்.
எனவே அருளே நம் குலம்.
நமக்கு அருள் அல்லாது வேறு ஒரு துணை இல்லை.
எனவே நமது குழுமம் அருளே ஆகிறது.
இவையாவையும் அறிய வைத்ததும் அருளே என
அருட் பெரும் ஜோதியாம் சிவம் அருளியது.
Our Origin is Grace and our race is also Grace
and we came to know the Grace by it's Grace.
அருளே நஞ்சுக அருளே நம்பெயர்
அருளே நாமறி வாயென்ற சிவமே.
அருளே நமது சுகம்; நமது பெயரும் அருளே.
இவையாவையும் அறிய வைத்ததும் அருளே என
அருட் பெரும் ஜோதியாம் சிவம் அருளியது.
Grace is our pleasure and our name is Grace
and we came to know the Grace by it's Grace.
அருளொளி யடைந்தனை அருளமு துண்டனை
அருண்மதி வாழ்கவென் றருளிய சிவமே.
ஒளிப்பேரினை அருளால் அடைந்தாய்;
அருளின் தயவால் அமுதினை உண்டாய்.
சூரியரும் சந்திரரும் போல் வாழ்வாங்கு வாழ்வாய்
என அருட் பெரும் ஜோதியாம் சிவம் அருளியது.
Grace bestowed you the inner Glow
and it blessed you bliss and peace.
You are going to glow like Sun and Moon
in an eternal life.
அருணிலை பெற்றனை அருள்வடி வுற்றனை
அருளர சியற்றுகென் றருளிய சிவமே.
அருள் தன்பெருநிலையை அருளியதால்
அருள் வடிவினைப் பெற்றாய்.
நீ அருளாட்சி புரிக என
அருட் பெரும் ஜோதியாம் சிவம் அருளியது.
By the grace of Grace, you got the form of Grace
and rule your life with all the full Grace filled in you.
அருட் பெரும் ஜோதி! அருட் பெரும் ஜோதி!
தனிப் பெரும் கருணை! அருட் பெரும் ஜோதி!
பாலு குருசுவாமி
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
Vadalur Jothi Ramalinga Swamigal(Thiru Arut Prakasa Vallalar , Ramalinga Adigalar) Concepts
Monday, May 24, 2010
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
Dear All, Vallalar Programs @ TAMIL NADU .. please contact the concern person for more details Sunday, September 8 ...
-
Sunday, October 13 6:00am Chennai,சன்மார்க்கப் பயிற்சி முகாம் When Sun, October 13, 6am – 6pm Where chennai ( map ) Description மணிம...
-
***************************************** Question: உள்ளம் என்பது எது ? நமது உடம்பின் மகத்துவம் என்ன ? 1. Thirumoolar Answer: "உள...
-
'The Tibetian Book of Living and Dying' written By Sogyal Rinpoche enlightens us about the Rainbow Body of the great Buddhist monks ...
-
KARUNAIMIGU SANMARGA FRIENDS, பேதம் என்பது என்ன?எவையல்லாம் பேதம்? பேதம்என்பதுவேறுபாடு. ...
-
Thank you so much, dear ~VallalarGroups! For these wonderful photo album! It is very awesome to watch all this pictures, it is almost like t...
-
Dear All, Gnaanasariyai First Song by US Mexico Maria Jothi from T.V.Malai Vallalar Trust thanks Vallalar Groups ---------- Forwarded ...
-
"நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ! வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ! தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ! கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேன...
-
http://www.4shared.com/dir/7141181/e1c6d6a4/sharing.html 2008-07-14 VALLALAR SONG LYRICS AND FONTS 5 file(s) File Fol...
-
🌲🍍 ஜீவகாருண்யம். 🍍🌲 சமுசாரிகள் விவாக முதலிய விசேஷ காரியங்களில் பந்தலை அலங்கரித்துக் - அவ்விடத்தில் வேறு வேறு சடங்குகளைச் செய்வித்தும் ...
Contact Form
Translitrator(English to Tamil)
Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)
No comments:
+Grab this
Post a Comment