Sunday, May 27, 2018

[vallalargroups:5961] திருவருட்பா - பதைத்தேன்

திருவருட்பா - பதைத்தேன் 


நாளும் பல கொடிய செய்திகள் நம்மை வந்து சேர்கின்றன. நாம் விரும்புகிறோமோ இல்லையோ, அவை நம் காதிலும் கண்ணிலும் விழுந்து கொண்டே இருக்கின்றன.

தொலைக் காட்சிகளில் , எங்கே நாம் மறந்து விடுவோமோ என்று காண்பித்த செய்திகளை மீண்டும் மீண்டும் காண்பித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

இதன் விளைவுகள் என்ன என்றால்,

ஒன்று, கொடிய செய்திகளை கேட்டு கேட்டு மனம் மரத்துப் போகும். இது தான் தினம் நடக்கிறதே. வழக்கமான ஒன்று தான் என்று நினைக்கத் தொடங்கி விடுவோம்.

இரண்டாவது, தீய செயல்களில் நம்மை அறியாமலேயே ஒரு சுவை வந்து விடும். நல்லவன் கூட , அட இப்படி செய்யலாமா ? நாமும் செய்து பார்த்தால் என்ன ? என்று ஒரு ஆர்வத்தை தூண்டி விடும்.

தீமைகளை கண்டு உள்ளம் பதை பதைத்தால் தான் அதை செய்யாமல் இருப்போம். செய்பவர்களை விட்டு விலகி நிற்போம். தீயவைகள் சாதாரணமானவை , எப்போதும் நடக்கும் ஒன்று தான் நினைத்து விட்டால், தீமைகளை தட்டிக் கேட்கும் மனம் போய்விடும். நாமும் செய்யலாம் என்றும் நினைக்கத் தொடங்கி விடுவோம்.

வள்ளலார் கடற்கரையில் நடந்து செல்கிறார். அங்கு மீன் பிடிக்கும் வலை, தூண்டில் எல்லாம் வெயிலில் காய வைத்து இருக்கிறார்கள். நாமாக இருந்தால் என்ன நினைப்போம் ? ஏதோ வலை, தூண்டில் எல்லாம் கிடக்கிறது என்று நினைப்போம்.

ஆனால், வள்ளலார் அவற்றைக் கண்டு மனம் பதைக்கிறார். ஐயோ, இந்த கொலை கருவிகளைக் கொண்டு எவ்வளவு மீன்களைப் பிடிப்பார்கள். அவற்றை கொல்வார்கள் . அப்போது அந்த மீன்கள் எவ்வளவு துடிக்கும். தூண்டிலில் சிக்கிய மீன்  எப்படி தவிக்கும் , தொண்டையில் முள் குத்தினால் எவ்வளவு வலிக்கும் என்று நினைத்து பதறுகிறார்.

கொடியவர்கள் மற்றவர்களை கொல்லத் தொடங்கிய போதெல்லாம் பயந்தேன். மற்ற உயிர்கள் பதைக்கும் போதெல்லாம் நானும் பயந்தேன்.  வலையையும் , தூண்டிலையும் கண்டபோதெல்லாம் உள்ளம் நடுங்கினேன்  என்கிறார் வள்ளலார்

பாடல்

துண்ணெனக் கொடியோர் பிற வுயிர்  கொல்லத் தொடங்கிய பேதெல்லாம் பயந்தேன் 
கண்ணினால் ஐயோ பிற வுயிர் பதைக்கக் கண்ட காலத்திலும் பதைத்தேன்
மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி வகைகளும் கண்ட போதெல்லாம் 
எண்ணி என் உள்ளம் நடுங்கிய நடுக்கம் எந்தை நின் திரு உள்ளம் அறியும் 


பொருள்

துண்ணெனக் = துணுக்குறும் படி

கொடியோர் = கொடியவர்கள்

பிற வுயிர் = பிற உயிர்களை

கொல்லத் தொடங்கிய = கொல்லத் தொடங்கிய

போதெல்லாம் பயந்தேன் = போதெல்லாம் பயம் கொண்டேன்

கண்ணினால் = கண்ணால்

ஐயோ = ஐயோ

பிற வுயிர் = மற்ற உயிர்கள்

பதைக்கக் கண்ட காலத்திலும் = பதைக்கின்ற காலத்திலும்

பதைத்தேன் = பதைப்பு அடைந்தேன்

மண்ணினில் = பூமியில்

வலையும் = (மீன் பிடிக்கும்) வலையும்

தூண்டிலும் = தூண்டிலும்

கண்ணி வகைகளும் = பறைவைகளைப் பிடிக்கும் கண்ணி வகைகளை

கண்ட போதெல்லாம் = பார்கின்றபோதெல்லாம்

எண்ணி = அவற்றை எண்ணி

என் உள்ளம் = எனது மனம்

நடுங்கிய நடுக்கம் = நடுங்கிய நடுக்கம்

எந்தை = என் தந்தையாகிய

நின் = உன்

திரு உள்ளம் = திரு உள்ளம்

அறியும் = அறியும்

துப்பாக்கியை கண்டால் மனம் பதற வேண்டும்.  கறி வெட்டும் கத்தியைக் கண்டால் மனம்  பதைக்க வேண்டும்.

உயிர்கள் துன்பப் படும் போது மட்டும் அல்ல, இனி துன்பப் படுமே என்று நினைத்து வருந்துகிறார் வள்ளுவர்.

அறிவினான் ஆகுவதுண்டோ பிறிதின் நோய் தன் நோய் போல் போற்றாக் கடை என்பார் வள்ளுவர்.

மற்ற உயிர்களை நம் உயிர் போல் நினைக்க வேண்டும்.

அருளின், கருணையின் உச்சம் இது.

அந்த உயர்ந்த அன்பு நம் மனத்திலும் சுரக்கட்டும்.

Monday, May 14, 2018

[vallalargroups:5959] நெஞ்சை உருக்கிய கதை.

நெஞ்சை உருக்கிய கதை.

🍀 தலைப்பு:- இன்னும் சில நாட்கள்.....

🍀 காலை நேரம்., அலுவலகத்திற்கு 
கிளம்பியாக வேண்டும் நான்.

🍀 செய்தித் தாளை எடுத்துப் பார்க்கிறேன், கண்ணீர் அஞ்சலி அறிவிப்பில் எனது புகைப்படம். 
அய்யோ....

🍀 என்ன ஆயிற்று எனக்கு?

🍀 நான் நன்றாகத்தானே இருக்கிறேன்?

🍀 ஒரு நிமிடம் யோசிக்கிறேன்....

🍀 நேற்று இரவு படுக்கைக்கு செல்லும் போது , என் இடது மார்பில் கடுமையான வலி ஏற்பட்டது. ஆனால், அதன் பிறகு எனக்கு எதுவும் நினைவில் இல்லை, எனக்கு நல்ல தூக்கம் என்று நினைக்கிறேன்.

🍀 காபி வேண்டுமே, என் மனைவி எங்கே? 
மணி பத்தாகிவிட்டது

🍀 என் பக்கத்தில் படுத்திருந்த யாரையும் காணோம்.

🍀 அது யார் கட்டிலில் கண்மூடி அசைவின்றி? அய்யோ நானே தான்.

🍀 அப்படியானால் நான் இறந்துவிட்டேனா? கதறினேன்......

🍀 என் அறைக்கு வெளியே கூட்டம், உறவுக்காரர்களும், நண்பர்களும் கூடியிருந்தார்கள்.
பெண்கள் எல்லோரும் அழுதுகொண்டிருந்தார்கள். ஆண்கள், சோக கப்பிய முகத்துடன் இறுக்கமாக நின்றிருந்தார்கள். தெரு ஜனங்கள் உள்ளே வந்து என் உடலைப் பார்த்துவிட்டுப் போகிறார்கள். 
என் மனைவிக்கு சிலர் ஆறுதல் சொல்கிறார்கள். குழந்தைகளைக் கட்டிப்பிடித்து அழுகிறார்கள்.

🍀 நான் இறக்கவில்லை.,
இங்கே இருக்கிறேன் என்று கத்தினேன்.

🍀 ஆனால், என் குரல் யாருக்கும் கேட்கவில்லை.

🍀 என் உடல் அருகே நான் நிற்பது கூட யாருக்கும் தெரியவில்லை.

🍀 அய்யோ என்ன செய்வேன் நான்? 
எப்படி அவர்களுக்குத் தெரிவிப்பேன்?

🍀 நான் மீண்டும் என் படுக்கை அறைக்கு சென்றேன். "நான் இறந்துவிட்டேனா?" நான் என்னையே கேட்டேன். இறப்பு இப்படித்தான் இருக்குமா?

🍀 என் மனைவியும், அம்மா, அப்பாவும் அடுத்த அறையில் அழுதுகொண்டிருந்தார்கள். என் மகனுக்கு என்ன நடக்கிறது என்பது விளங்கவில்லை. எல்லோரும் அழுவதால், அவனும் அழுது கொண்டிருக்கிறான்.
நான் அவனை மிகவும் நேசிக்கிறேன். அவனை பிரிந்து என்னால் இருக்கவே முடியாது. என் மனைவி, பாசமும், பரிவும் கொண்டவள். எனக்கு தலைவலி என்றால் கூட அவள் அழுவாள். 
அவளை பிரியப்போவதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
அம்மா, நான் ஒரு குழந்தைக்கு தந்தையானபோதும், இன்னமும் என்னை குழந்தையாகவே பார்ப்பவள். அப்பா, கண்டிப்பானவர் என்றாலும், அந்த வார்த்தைகளில் ஒவ்வொன்றிலும் பாசமே நிறைந்திருக்கும்.
இதோ, ஒரு மூலையின் நின்று அழுது கொண்டிருப்பவன், அட.. என் நண்பன். பகையை மறந்து வந்திருக்கிறானே? சிறு தவறான புரிதல் எங்களை பிரித்துவிட்டது. இருவரும் பேசி ஓராண்டுக்கு மேலாகிறது. அவனிடம் மன்னிப்புக்கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது.

🍀 அருகில் சென்று அவனை அழைக்கிறேன். ஆனால், என் குரல் அவனுக்குக் கேட்கவில்லை. என் உடலைப் பார்த்து தேம்பித் தேம்பி அழுது கொண்டிருக்கிறான்.

🍀 ஆம்.. நான்தான் இறந்துவிட்டேனே. அருகில் மாட்டப்பட்டிருக்கும் சாமிப் படங்களைப் பார்க்கிறேன்.

🍀 "ஓ கடவுளே! எனக்கு இன்னும் சில நாட்கள் கொடுங்கள். நான் என் மனைவி, பெற்றோர்கள் நண்பர்களிடம் எவ்வளவு அன்பு வைத்துள்ளேன் என்று வெளிப்படுத்த வேண்டும்" என் மனைவி அறையில் நுழைந்தாள். "நீ அழகாக இருக்கிறாய் "
என்று நான் கத்தினேன். நான் அவளால் என் வார்த்தைகளைக் கேட்கவில்லை.
உண்மையில் இதற்கு முன்னால் இவ்வாறு சொல்லவே இல்லை.

🍀 "கடவுளே!" நான் கதறினேன். அழுதேன். தயவு செய்து இன்னும் ஒரு வாய்ப்பு, என் குழந்தையை கட்டி அணைக்க , என் அம்மாவை ஒரு முறையாவது சிரிக்க வைக்க , என் அப்பா என்னை பெருமையாய் நினைக்க வைக்க , என் நண்பர்களிடம் மன்னிப்பு கேட்க, இப்பொழுது நான் அழுதேன்!

🍀 திடீரென என் உடலை பிடித்து யாரோ உலுக்கினார்கள். அதிர்ந்து கண் விழித்தேன். "தூக்கத்தில் என்ன உளறல், கனவு ஏதாவது கண்டீர்களா? என்றாள் மனைவி.
ஆம் வெறும் கனவு. நிம்மதியானேன். ..

🍀 என் மனைவியால் தற்போது நான் பேசுவதைக் கேட்க முடியும் இது என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணம். அவளை கட்டி அணைத்து. " இந்த பிரபஞ்சத்திலேயே நீ மிகவும் அழகான மற்றும் பாசமான மனைவி, உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன்" என்றேன் முதன் முறையாக.
முதலில் புரியாமல் விழித்த அவள், பின்னர், என் அருகே வந்து என்னை அணைத்துக்கொண்டாள். அவளது கண்களில் இருந்து லேசாக கண்ணீர் வெளியேறத் துடித்தது. அது ஆனந்தக் கண்ணீர் என்பதை என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது.

🍀 இந்த இரண்டாவது வாய்ப்பு கொடுத்த கடவுளுக்கு நன்றி.
நண்பர்களே......

🍀 இன்னும் உங்களுக்கு நேரம் இருக்கிறது. உங்களது ஈகோவை புறம் தள்ளி விட்டு உங்களது பாசத்தையும் நேசத்தையும் உங்களிடம் நெருக்கமானவர்களிடம் வெளிபடுத்துங்கள்.

🍀 ஏனெனில் உங்களுது பாசத்தையும் நேசத்தையும் வெளிபடுத்த உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்!!!!

Thursday, May 10, 2018

[vallalargroups:5957] Bangalore Sanmarkka Thondar Nagaraj Marriage @ Vadalur

பெங்களூர் சங்கத்தின் வள்ளற் தொண்டர் நாகராஜிற்க்கு திருமணம் நடைபெற உள்ளது. அனைவரும் வள்ளற்பெருமானிடம் பிரார்த்தனை செய்து கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்

[vallalargroups:5956] முத்தேக சித்தி அனுபவத்தைப் பெறுவதற்கு

அருட்பெருஞ்ஜோதி🔥
            அருட்பெருஞ்ஜோதி🔥தனிப்பெருங்கருணை🔥
             அருட்பெருஞ்ஜோதி🔥
                   மந்திரம்💥
                      மருந்து🌿
                         மணி🔥
                   *************
          ஆன்மநேய உயிர் உறவுகளாகிய சகோதர சகோதரிகளுக்கு பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனத்தை தயவுடன் தெரிவித்து 
மகிழ்கின்றேன்💐🙏
          அருமை சகோதர சகோதரிகள் தயவுசெய்து இந்தப் பதிவை ஒரு ஐந்து நிமிடம் பொறுமையுடன் பார்த்து படித்து அறிந்துகொள்ள
வேண்டி, தயவுடன் விண்ணப்பித்துக் கொள்கின்றேன்🙏.
          எத்தனையோ கலை நிகழ்ச்சிகளுக்கு நாம் குடும்பத்துடன் சென்று அமர்ந்து பொறுமையுடன் குறைந்தது மூன்று மணிநேரத்திற்கும் மேலாக நேரத்தைக் கழித்து ,
        எந்தவிதத்திலும் நமது உடம்பிற்கோ உயிருக்கோ  எந்தவிதப் பயனைத் தராமலும்,
வெறும் மனதளவில் சந்தோஷித்து , கண்ணால் பார்க்கின்ற அந்த நேரத்தில்மட்டும் ஒருசிறு மணித்துளிகள் மனதிற்கு மகிழ்வைத் தரக்கூடிய சிற்றின்பத்தால் காலத்தை விரையம் செய்து, வளர்ந்து, வாழ்ந்து வயோதிகத்தால் நரை திரை மூப்பு கண்டு இறுதியில் மாண்டு மடிந்துப் போக்கின்ற நாம் அனைவரும் ,
     என்றாவது நாம் பெறுதர்கரிய 
இந்த மானிடத்தேகத்தைப் பெற்றுக்கொண்டோமே ,
இந்த உடம்பின் வகையையும், உயிரின்வகை ,
இவ்விரண்டையும் இயக்கும் சிவமாகிய பரம்பொருள் தன்மையையும்ம், அருள்சக்தியின் ஆற்றலையையும் பற்றி என்றாவது சிந்தித்திருப்போமா ?

     இதைத்தான் நமது அருட்பெருந்தந்தை அருட்பிரகாச வள்ளல் பெருமான் திருவருட்பா ஆறாம்திருமுறை பக்கம் 340 முறையீடு என்ற தலைப்பில் கடைசி பாடலில் தமது வருத்தத்தை பதிவுசெய்து நமக்காக  நமது அலட்சியப்போக்கை நினைத்து ,மனம் வருந்தி வெளிப்படுத்தியுள்ளார்கள்.
 
 பாடல்;🌷
 சிரிப்பிலே பொழுது கழிக்கும் இவ்வாழ்க்கைச் 
           சிறியவர்  சிந்தை 
             மாத்திரமோ
பொருப்பிலே தவஞ்செய் 
பெரியர்தம் மனமும்
             புளிப்பிலே துவர்ப்பிலே
             உவர்ப்புக் 
கரிப்பிலே கொடிய 
கயப்பிலேகடிய
             கார்ப்பிலே
             கார்ப்பொடு கலந்த
எரிப்பிலே புகுவதன்றி 
எள் அளவும்
         இனிப்பிலே
               புகுகின்ற திலையே;
....என்று இவ்வுலகில் நம்மை அகமிருந்து ஆளும் நமது அருட்பெருந் தலைவராகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடைய தரம் அறியாது, நிலையற்ற இவ்வுலகவாழ்வையே நிலையாகப் பிடித்துக்கொண்டு விரும்பி களித்து காலத்தை வீணாக்குகின்ற ஆன்ம சிறுமையையுடைய சிறியவர்கள்தான் மண்ணாசை பெண்ணாசை பொன்னசை என்ற விடய சிற்றின்ப நிகழ்வுகளில் காலத்தை வீணடிக்கின்றார்கள் என்றால் !
    இவை எல்லாவற்றையும் அறிந்திருக்கும் தவத்தில் சிறந்த பெரியோர்கள்கூட தமது மனத்தை தேனாய் தெள்ளமுதாய் இனிக்கும் அழிவற்ற நிலையான பேரின்பத்தை அளிக்கக்கூடிய அருள்வாழ்வை நாடச்செய்யாமல் ,
    மற்றைய  விடய விஷயங்களில் நாடச்செய்து பொருப்பற்று காலத்தை விரையம் ஆக்குகின்றார்களே என்று நமது அருட்பெருந் தந்தை அருட்பிரகாச வள்ளல் பெருமான் மிகவும் வருந்துகின்றார்கள்👏.
     உயர்ந்த ஆறறிவு உடைய உயர்பிறப்பாகிய மனித தேகத்தைத்தைப் பெற்றுள்ள நாம் நமது மனித பிறப்பு எதற்கு கொடுக்கப்பட்டது?
   
     இம்மானுடத் தேகத்தினால் அடையவேண்டிய நமது ஆன்ம லட்சியம்தான் என்ன?
    
      நமக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த உடம்பின் உயர்ந்த தரம் என்ன ?
   
     இவ்வுடம்பை இயக்கும் நமது உயிரின் தரம் என்ன ?
    
       இவ்வுயிரையும் இவ்வுடம்பையும் நமது ஆன்ம உள்ளொளியாய் இருந்து இயக்கும் நமது ஆன்மநாயகராகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தரம் என்ன ?
        
         இந்த உடம்பை நாம் என்ன செய்தல் வேண்டும் ?
        
       நமது உயிராகிய ஆன்மா எந்த நிலை அடைதல் வேண்டும் ?
         என்று என்றாவது பொருப்போடு விசாரித்து விளக்கம் பெற்றுள்ளோமோ ?
    அதற்காண முயற்சியை மேற்கொண்டுள்ளோமா ?

     எனது ஆன்ம உயிர் உறவுகளே !
     ஆயிரம்கோடி சூரியப் பிரகாசமுடைய அருட்பெருஞ்ஜோதியை நமது ஆன்மாவின் அகத்தில் கொண்டுள்ள நாம் எப்படிப்பட்ட அற்புத சக்தியோடு  இருக்கின்றோம் என்பதும்.
    அந்த அற்புத சக்தியை நாம் எப்படி அடைவது என்பதும்.
   அவற்றை அடையவிடாமல் நமக்கு தடையாக மறைப்பாகவும் திரைகளாகவும் இருக்கின்றவைகள் எவை எவை என்பதையும் அறிந்திருக்கின்றோமா?
     அவற்றை அறிந்து அடைந்தவர்கள் சித்தர்களாகவும் ஞானிகளாகவும் மாறிவிட்டார்கள் ஆனால் நாம் ........?

     🙏🔥பொய்யுடம்பும் மாற்று 
         அரியா பொன்னுடம்பும்🔥🙏
         நாம் பெற்றுள்ள இந்த அசுத்த புலால் உடம்புதான் ,
      மாற்று (தங்கத்தின் மதிப்பைக் குறிக்கும் அளவீடு) இத்தனை என்று அளவிடமுடியாத சுத்த பொன்னுடம்பாய் மாறக்கூடியது என்பதை நாம் அறிந்துள்ளோமா ?
          ஆம் நாம் பெற்றுள்ள இந்த உடம்பு  பஞ்சபூதத்தில் மண்ணின் தன்மைக்கொண்டு விளங்கும்  இம்மண்ணுடம்பிற்கு "மெய்" என்றும் ஓர் பெயர் உண்டு. 
      " பொய்" என்பது நிலையில்லாமல் அழியக்கூடியது.
         "மெய்" என்பது அழிவற்று என்றும் நிலையாக இருக்கக்கூடியது.

 நமது அசுத்த இந்திரியங்களையும்,
நமது அசுத்த அறிவையும்,
நமது அசுத்த கரணங்களையும்,
நமது அசுத்த ஜீவனையும்,
நமது அசுத்த ஆன்ம குற்றங்களையும்
திருவருட் சேர்க்கையால்(அருளொளி) சுத்த இந்திரியங்களாகவும்,
சுத்த கரணங்களாகவும்,
சுத்த ஜீவனாகவும்,
மலங்களற்ற சுத்த ஆன்மாவாகவும்  மாற்றம் செய்து ,
கடவுளது மெய்யறிவையும்,
கடவுளது மெய்யுடம்பையும் பெற்று இவ்வுலகில் அருள்வாழ்வு வாழப்பிறந்தவர்கள் என்று ,
நாம் நமது அற்புதத்தன்மையை என்றாவது உணர்ந்திருக்கின்றோமா?

   ஆன்மநேய உயிர் உறவுகளே ,
   இப்படி இந்த அசுத்த பொய்யான புலால் உடம்பை சுத்த பொன்னுடம்பாய் மாற்றி நமது அகம் நிறைந்துள்ள கடவுளின் தன்மையை முழுவதும் பெற்று வாழக்கூடிய வழி துறைதான் இந்த மருந்து மந்திரம் மணி என்பவைகளாகும்.

     🙏�மருந்தறியேன்,     
            மணியறியேன் ,
                மந்திரம் ஒன்றறியேன் 🔥🙏
        மேற்கூறிய இந்த மருந்து மந்திரம் மணிவகை அறியாமல்தான் நமது வள்ளல் பெருமான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் ,
முறையீடு செய்கின்றார்கள்.
  திருவருட்பா ஆறாம்திருமுறையில் முறையீடு என்ற 9வது தலைப்பில் முதல் பாடலாக ,
 மருந்தறியேன் மணிஅறியேன் மந்திரம் ஒன்றறியேன்
 மதியறியேன் விதிஅறியேன் வாழ்க்கை நிலை அறியேன்.
      ....என்று ஆண்டவரிடம் முறையிட்டு வேண்டுகின்றார்கள்.

 இதில் ,
மருந்து சுத்த உடம்பையும்,
மந்திரம் பிரணவ உடம்பையும்,
மணி ஞான உடம்பையும் தரவல்லது.
   எப்படி என்றால்

மருந்து 🌿(அருள் உணவு) ;
        மருந்து என்பது நமது முதலாவது அசுத்த தூல உடம்பை திருவருட் சேர்க்கையால் சுத்தமாகிய சத்துவகுணம் நிறைந்த அருளைத் தரவல்ல  இயற்கை தாவர "சுத்த அருள் உணவினால்" "சுத்த பொன் உடம்பாய்" மற்றித் தரவல்லது🌿

மந்திரம் 💥(அருள் உணர்வு);
      மந்திரம் என்பது நமது இரண்டாவது சூக்கும அசுத்த கரண உடம்பை திருவருட் சேர்க்கையால் சுத்த "அருள் உணர்வினால்" சுத்த "ஓங்கார பிரணவ தேகமாய் " மாற்றித் தரவல்லது💥

மணி 🔥( அருள் ஒளி );
           மணி என்பது நமது மூன்றாவது தேகமாகிய அசுத்த காரணத் தேகத்தை திருவருட் சேர்க்கையால் அருளொளிக்கண்டு "அருள் உறவினால்"சுத்த ஞானத் தேகமாக மாற்றித் தரவல்லது என்பதாகும்.

      இந்த முத்தேக சித்தி நிலைதான் அருட்பெருஞ்ஜோதி கடவுளது தன்மையோடு விளங்கும் 
எல்லாம் செய்யவல்ல ஞான சித்திநிலையாயும்,
அழிவற்ற இயற்கை அருட்பெருஞ்ஜோதி பெருவாழ்வு நிலையாகவும் உள்ளது.

     இந்த உண்மையை தமது அகத்தில் அனுபவித்து அறிந்திருந்த நமது தமிழ் சித்தர்கள் , புறத்தில் அந்த கடவுள் அனுபவத்தை தத்துவமாக உலகிற்கு உணர்த்துவதற்காகத்தான் கோயில் கற்பகிரகங்களில் கடவுள் சிலைகளை அற்புத சித்த மருந்துகளாலும்,
நவமணிகளாலும்,
மந்திரத்தினாலும் உச்சாடனம் செய்து கடவுள் சிலைகளை அமைத்து மக்களை வழிபடச்செய்தார்கள்🌷💐.

🙏🔥 மருந்துஇது,
             மந்திரம்இது 
                மணிஇது என்று அறிந்துகொள்ளல்🔥🙏
            மேலே கண்ட முறையீடு பாடலில் நமது அருட்பெருந்தந்தை வள்ளல் பெருமான் , இந்த மருந்து மணி மந்திரம் எதுவென்று அறியாமல் ஆண்டவரிடம் முறையிட்டு அழுதார்கள்.
     அதன் பலனாக அந்த மருந்தையும் மருந்தையும் மணியையும் ஆண்டவர் அறிவித்து அருளியதை,
ஆறாம்திருமுறை "அருட்பெருஞ்ஜோதி என் ஆண்டவர் " என்ற தலைப்பில் ஆண்டவர் தனக்கு அருள்பாளித்த வல்லபத்தை கீழ்கண்ட பாடல் மூலம் தெளிவுபடுத்துகின்றார்கள்.
பாடல்💐🌷
மருந்துஇது
மணிஇது மந்திரம்இது 
       செய்வகைஇது  
        துறைஇது
        வழிஇது எனவே
இருந்தெனுள் அறிவித்துத் தெள்ளமுதளித்தே
          என்னையும்   
          தன்னையும்
          ஏகமதாக்கி
........என்று ஆண்டவர் மருந்து மணி மந்திரத்தை அருளொளியால் பெறச்செய்த அனுபவத்தை இப்பாடல் பாடல்மூலம் பெருமான் பதிவுசெய்கின்றார்கள்.

  🙏🔥 அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே மருந்தாய் மணியாய் மந்திரமாய் இருப்பது🔥🙏   
    அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே மருந்தாய் மந்திரமாய் மணியாய் இருப்பதை அருட்பா ஆறாம்திருமுறை "காட்சி களிப்பு"என்ற 41 வது தலைப்பில் 7வது பாடலில் ,
 மருந்தானை மணியானை வழுத்தா
         நின்ற மந்திரங்க
         ளானானை
         வானநாட்டு
விருந்தானை உறவானை  நண்பினானை....
      என்று மருந்தாயும் மணியாயும் மந்திரமாயும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே இருந்து அருள்பாளிப்பதையும் நமது அருட்பெருந் தந்தை அருட்பிரகாச வள்ளல் பெருமான் நமக்குத் தெளிவுபடுத்துகின்றார்கள்.

     மேலும் மருந்தாய் ,மந்திரமாய்,மணியாய் இருக்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எப்படியெல்லாம் நமது உடம்பை பற்றியிருக்கும் பிணியையும்,
 உயிரைப் பற்றியிருக்கும் பிணியையும் நீக்கி,
 இவ்வுடம்பை 
சுத்த  பொன்னுடம்பாகவும்,
சுத்த பிரணவ உடம்பாகவும்,
சுத்த ஞான உடம்பாகவும் மாற்றித் தருகின்றார்கள் என்பதை "அருட் பெருஞ்ஜோதி அகவல் "
1291வது வரி தொடங்கி 1336 வரிவரை பார்த்து படித்து அறிந்து உணர்ந்து அருள்ளொளியால் முத்தேக சித்தி அனுபவத்தைப் பெறுவதற்கு முயல்வோம்;
இதனை விரிக்கில் விரிந்துகொண்டே இருக்கும்,
ஆனால் நமக்கு படிப்பதற்கு மனம் பொறுமையுடன் சம்மதிக்காது என்ற காரணத்தினால் இத்துடன் நிறைவுசெய்துக்கொள்கின்றேன்;
......நன்றி 🙏
........வள்ளல் மலரடிப் போற்றி ! போற்றி ! 🔥🙏
....பெருமான் துணையில்🔥🙏
......வள்ளல் அடிமை 🙏
.....வடலூர் இரமேஷ்🙏

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)