Monday, June 30, 2014

[vallalargroups:5496] Fwd: vallalar natural healing prog



vallalar natural healing program





--
Best Regards,
ArulThiru.Babu Sadhu,
Arutperunjothi Vallalar Charitable Trust,
Thiruvannamalai.
Mob: +91 9942776351
www.vallalarmission.org



Friday, June 27, 2014

[vallalargroups:5490] ஆன்மாவும் சுத்த தேகமும்

ஆன்மாவும் சுத்த தேகமும்

மூப்பு - முதுமை : இதனை நினைத்தாலே எல்லோரும் கதி கலங்குவர் . பக்குவப்பட்டோரே வருந்தாமல் மனோதிடத்துடன் இருப்பர்.

முதுமை ஏன் எப்படி வந்தடைகின்றது ??

நாளாக நாளாக வயது ஏறுகின்றது - வயது ஏற ஏற மூப்பு உடம்பினை வந்தடைகின்றது.

1 வயது ஏற ஏற, அணுக்களுக்கு கிடைக்கக்கூடிய உஷ்ணம் ( சக்தி ) குறைந்து போய், அதனால் உடலின் அணுக்களின் - வளர்சிதை மாற்றம் - ( cells meiosis and mitosis division ) படிப்படியாகக் குறைந்து போய், அவைகளின் ஆயுள் குறைந்து போய், அதனால் தோலில் திரைகள் தோன்றி, சுருக்கம் வர ஆரம்பிக்கிறது. நோய்க்கும் ஆட்படுகிறது

அதனால் , அணுக்களுக்கு, ஓயாமல் சக்தி கிடைத்துக் கொண்டே இருந்தால், அவைகளின் ஆயுள் நீடித்துக் கொண்டே போகும் - உடலும் "என்றும் பதினாறு" போல் இருக்கும்

2. நம் குணத்தினாலும் - கோபம் , பேராசை , கவலைகளினாலும் , வேற்றுமை பாராட்டுவதினாலும் - இருமைகளினாலும் - உயர்வு/தாழ்வு , நல்லது/தீயது , வேண்டும்/வேண்டாம் என்பதினாலும் உடலின் அணுக்களின் சிதைவு துரிதப்படுகிறது - உடல் ஆரோக்கியம் கெட்டு, நோய்வாய்ப் படுகிறோம்.


3. புறத்தினில் காலத்தை அளக்கும் கருவிகளாக சூரியனும் சந்திரனும் செயல்பட்டு காலகதியை ஏற்படுத்துகின்றனர். உடம்பினில் காலத்தை அளக்கும் கருவிகள் எங்கு அமைக்கப்பட்டுள்ளன ??

காலத்தின் இயக்கம் மூளையிலுள்ள பீனியல் சுரப்பியில் அமைக்கப்பட்டுள்ளன. இது செயல்பட செயல்பட , சுவாசகதி நடந்து நடந்து , நம் ஆயுள் குறைந்து கொண்டே வருகின்றது.

" காலன் நடப்பது "கால் " என்னும் வாசியினாலே " - காலனும் நம் அருகே வந்து கொண்டே இருக்கிறான்.

காலனின் இயக்கத்தை ஓட்டத்தை எப்படி நிறுத்துவது ?? அதை நிறுத்தக்கூடிய வல்லமை ஒன்றே ஒன்றுக்குத் தான் இருக்கிறது.

" காலனை காலால் உதைத்தவளாம் வாலை "

அது தான் "திருவடி"- இது மார்க்கண்டேய புராணத்தால் நிரூபிக்கப்பட்டிருக்கிறது


காலனை ஜெயிப்பதற்கு அரும்பாடுபட்டு, ஆராய்ந்து, காடு மலைகளில் திரிந்து , சித்தர்களால் கண்டறியப்பட்டது தான் " காயகல்பம் " என்னும் மூலிகையாலான ஔஷதம்.
இது உடம்பை கல்ப காலத்துக்கு நீடித்திருக்க செய்யும் அற்புத மருந்து ஆகும்.

இதனை சித்தர்கள் பலவாறாக பெயரிட்டு அழைத்தனர் - “அமுரி - முப்பு - முப்பூ குரு - அமுதகலசம் - அமிர்தம்” என்றெல்லாம் அழைத்தனர்.

" முப்பு கண்டார் மூப்பை வென்றார்" என்பது சித்தர்களின் வாக்கு

ஆனாலும் இவைகள் யாவும் ' புறம் "



அகமுகமாக நோக்கில், எவ்வாறு சுருக்கம் நிறைந்த ஒரு சட்டையை, ஒரு இஸ்திரிப் பெட்டி, தன் உஷ்ணத்தால், சுருக்கத்தை நீக்குகின்றதோ, அவ்வாறே, ஆன்மாவும் தன் அதீத சுத்த உஷ்ணத்தால், ( கோடி சூரியப் பிரகாசத்தால் ) உடல் முழுதும் பரவியும் பாய்ந்தும், உடலின் அணுக்களை வேதித்து, சுத்தம் செய்து நரை, திரை, மூப்பை நீக்கி விடுகின்றது.
உடல் காயசித்தி அடைகிறது

ஆன்மவொளி உடல் முழுதும் பரவ பரவ , பசி - தூக்கம் - சோர்வு எல்லாம் படிப்படியாக குறைந்து போய், அதனால் மலஜல உபாதிகள் குறைந்து போய், உடலுக்கு புறத்திலிருந்து உணவு - ஓய்வின் தேவை அற்றுப் போய், அதனால் உடலில் அசுத்தம் உற்பத்தியாவது அற்றுப் போய், உடல் ஆன்மவொளியால் பொன்னொளி வீசும்.
இது ஆன்மதேகமாகிய சுத்த தேகம் - சுவர்ண தேகம்

இது " கஜேந்திர மோட்சம் " என்னும் புராணத்தால் நிரூபிக்கப்பட்டிருக்கின்றது

கஜேந்திரன் - உடலோடு கூடிய ஜீவன்

முதலை - காலன்

பெருமாள் / மஹாவிஷ்ணு - ஆன்மா

காலன் வந்து ஜீவனைக் கவர்ந்து செல்ல முற்பட, அது ஆன்மாவின் உதவியை நாட, ஆன்மா வந்து காலனை கொல்கிறது

புராணங்களின் உண்மைப் பொருளைத் தெரிந்து கொண்டாலே, ஆன்மாவை அடைவதற்கான பயிற்சியை நாம் புரிந்து கொள்ள முடியும். ஆனால் வள்ளலார் புராணங்கள் /இதிகாசங்கள் எல்லாம் பொய் என்று கூறியதால் , சன்மார்க்கிகள், அதைப் புறக்கணித்து , பயிற்சி/சாதனை என்னவென்று தெரியாமல் இன்னமும் தேடிக் கொண்டு இருக்கிறார்கள் .

வள்ளலார் என்ன சாதனைகள் செய்து முத்தேக சித்தி அடைந்திருப்பார் என்று யூகிக்க முடியாமல் இருக்கிறார்கள்



புறத்திலே மூலிகைகளை தேடி அலையாமல் , அகத்திலே ஆன்மாவை சரணடைந்து , சாதனைகள் பயின்று, இதனை ஆற்றின், அதுவே என்றும் அழியா நித்திய உடம்பை நல்கும் என்பது திண்ணம்




வெங்கடேஷ்



[vallalargroups:5489] கதம்பக் கட்டுரைகள் - பாகம் 2

கதம்பக் கட்டுரைகள் - பாகம் 2

I மனம் : வேறு பெயர்கள்

1. ராவணன்

2. திருதராஷ்டிரன்

3. இரணியன்

4. மஹாபலி

5. மன்மதன்


II பைபிளும் திருவருட்பாவும் :

1. பைபிள் :
"தட்டுங்கள் திறக்கப்படும் " என்கின்றது

இந்து சமயம் : வைகுண்ட ஏகாதசி அன்று " பரமபத வாசல் திறக்கப்பட்டு - ஆன்மவாகிய பெருமாள் தரிசனம் கிடைக்கின்றது

திருவருட்பா :
மணி நாசி அடைப்பதனைத் திறந்து
முகர்ந்து அறிகாண் என்கின்றது


மேற்கூறியவைகள் யாவும் ஒரே அனுபவம் - சுழிமுனை திறப்பதும் - பிரமரந்திரம் திறப்பதும்

 
2. பைபிள் : “ கேளுங்கள் கொடுக்கப்படும்” என்கின்றது

இந்து சமயம் :
இதனை " கற்பகம் - கல்பதரு " கேட்பதைக் கொடுக்கும் மரமாக கற்பிக்கன்றது


வள்ளலார் : “ கற்பகம் “ என்று கூறுவதும் இதனைத் தான்

மேற்கூறியவைகள் யாவும் குறிப்பிடும் ஒரே அனுபவம் - ஆன்மாவைத் தான்


 
 
வெங்கடேஷ்





[vallalargroups:5488] இன்பம் துன்பம்



---------- Forwarded message ----------
From: Dheena Dayaalan <uyir73@gmail.com>
Date: Wednesday, June 25, 2014
Subject:
To: Vallalar Groups <vallalargroups@gmail.com>, Vallalar Groups <vallalargroups@googlegroups.com>


அன்புடையீர் 

              ஆன்மா இன்பதுன்பங்களை அனுபவிக்க இந்த உடலை எடுத்து வந்துள்ளது . இன்பம் துன்பம் இரண்டுக்கும் காரணம் ஆசை . ஒரு பொருள் தன் ஆசை படி கிடைத்துவிட்டால் இன்பம் அது கிடைக்காவிட்டால் துன்பம் தரும். இந்த இன்பம் ,துன்பம் மற்றும் ஆசை முதலிய மூன்றும் நம்முள் தானே இருக்கிறது .இந்த மூன்றுக்கும் காரணம் நம் கையில்தான் உள்ளது . 

             ஆன்மாவுக்கும் உடலுக்கும் நடுவே மனம் உள்ளது. ஆன்மா ஆனந்தமயமானது அந்த ஆனந்தம் உடலில் பாய்ந்தால் ,அதனை அனுபவிக்க வெளி உலக சூழல் ஆனந்தம் தருமாறு மாறிவிடும். உடலில் ஆனந்தம் பாய்வது குறைந்தால் உலக சூழல் துக்கம் தருமாறு மாறிவிடும். ஆனந்தம் வெகுவாக குறைந்துவிட்டால்  பசி பிணி மூப்பு உறக்கம் வந்துவிடும் கடைசியாக மரணம் ஏற்படும் .

            உடல் ஆனந்தத்தை அனுபவிப்பது மனதின் அடர்த்தியை பொருத்து அமையும். மனதின் அடர்த்தி குறைய குறைய பசி பிணி மூப்பு உறக்கம் குறைந்துவிடும் . மரணமிலா பெரு வாழ்வு கிட்டும். மனதின் அடர்த்தி ஆசையின் அளவை பொருத்து அமையும். ஆசைகள் அதிகரித்தால் அதனை அடைய உண்டாகும் எண்ண பதிவுகள் அதிகரிக்கும். எண்ண பதிவுகள் அதிகரித்தால் மனம் தடிமன் அதிகரிக்கும். மனதின் அடர்த்தி அதிகரித்தால் இன்பம் குறைந்து துன்பமே ஏற்படும். மரணம் உண்டாகும் .

           ஆசை இல்லாமல் இருந்தால் எண்ணங்கள் இல்லாமல் போகும் அதனால் மனதின் அடர்த்தி குறையும் . அடர்த்தி குறைந்தால் ஆனந்தம் உடலில் பாயும் தானே வெளி சூழல் ஆனந்தமாக மாறிவிடும். மனதை இல்லாமல் செய்து ஆன்மாவையும் உடலையும் சேர்த்தால் பசி பிணி மூப்பு உறக்கம் மறைந்து சுத்த தேகம் உண்டாகும் அதன் பின் பிரணவ தேகம் மற்றும் ஞான தேகம் உண்டாகி மரணமிலா பெரு வாழ்வு அடைந்திடலாம்.

           ஆதலால் ஆசைகளை துறந்து சும்மா இருந்தால் சுகம் கிடைக்கும் .

           




--




web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி


Wednesday, June 25, 2014

[vallalargroups:5496]

அன்புடையீர் 

              ஆன்மா இன்பதுன்பங்களை அனுபவிக்க இந்த உடலை எடுத்து வந்துள்ளது . இன்பம் துன்பம் இரண்டுக்கும் காரணம் ஆசை . ஒரு பொருள் தன் ஆசை படி கிடைத்துவிட்டால் இன்பம் அது கிடைக்காவிட்டால் துன்பம் தரும். இந்த இன்பம் ,துன்பம் மற்றும் ஆசை முதலிய மூன்றும் நம்முள் தானே இருக்கிறது .இந்த மூன்றுக்கும் காரணம் நம் கையில்தான் உள்ளது . 

             ஆன்மாவுக்கும் உடலுக்கும் நடுவே மனம் உள்ளது. ஆன்மா ஆனந்தமயமானது அந்த ஆனந்தம் உடலில் பாய்ந்தால் ,அதனை அனுபவிக்க வெளி உலக சூழல் ஆனந்தம் தருமாறு மாறிவிடும். உடலில் ஆனந்தம் பாய்வது குறைந்தால் உலக சூழல் துக்கம் தருமாறு மாறிவிடும். ஆனந்தம் வெகுவாக குறைந்துவிட்டால்  பசி பிணி மூப்பு உறக்கம் வந்துவிடும் கடைசியாக மரணம் ஏற்படும் .

            உடல் ஆனந்தத்தை அனுபவிப்பது மனதின் அடர்த்தியை பொருத்து அமையும். மனதின் அடர்த்தி குறைய குறைய பசி பிணி மூப்பு உறக்கம் குறைந்துவிடும் . மரணமிலா பெரு வாழ்வு கிட்டும். மனதின் அடர்த்தி ஆசையின் அளவை பொருத்து அமையும். ஆசைகள் அதிகரித்தால் அதனை அடைய உண்டாகும் எண்ண பதிவுகள் அதிகரிக்கும். எண்ண பதிவுகள் அதிகரித்தால் மனம் தடிமன் அதிகரிக்கும். மனதின் அடர்த்தி அதிகரித்தால் இன்பம் குறைந்து துன்பமே ஏற்படும். மரணம் உண்டாகும் .

           ஆசை இல்லாமல் இருந்தால் எண்ணங்கள் இல்லாமல் போகும் அதனால் மனதின் அடர்த்தி குறையும் . அடர்த்தி குறைந்தால் ஆனந்தம் உடலில் பாயும் தானே வெளி சூழல் ஆனந்தமாக மாறிவிடும். மனதை இல்லாமல் செய்து ஆன்மாவையும் உடலையும் சேர்த்தால் பசி பிணி மூப்பு உறக்கம் மறைந்து சுத்த தேகம் உண்டாகும் அதன் பின் பிரணவ தேகம் மற்றும் ஞான தேகம் உண்டாகி மரணமிலா பெரு வாழ்வு அடைந்திடலாம்.

           ஆதலால் ஆசைகளை துறந்து சும்மா இருந்தால் சுகம் கிடைக்கும் .

           

[vallalargroups:5487] கதம்பக் கட்டுரைகள்

கதம்பக் கட்டுரைகள் :

1. ஆன்மா - வேறு பெயர்கள் :

1 காயகல்பம் : இது ஒரு மருந்து . உடலை அழியாமல் காத்து , கல்ப காலத்திற்கு நீடித்திருக்கச் செய்யும்.

சித்தர்களும் , சித்த மருத்துவமும் - புறத்தே மூலிகைகளைக் கொண்டு மருந்தாச் சொல்கின்றது - செய்கின்றது - ஆனால் , அகமாக நோக்கில், ஆன்மா தன் அரும்பெரும் ஆற்றலால், உடலை நீடித்திருக்கச் செய்கின்றது

சன்மார்க்க நோக்கில், ஆன்மா தான் காயகல்பம்

2 குறிஞ்சி மலர் : இது மலையில் 12 வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் நீல நிறப் பூ.
ஆன்மாவும் , ஏறா மலை மீது, 12 வருட கடுஞ்சாதனைக்குப் பின், மலரும் அற்புதப் பூ.

சன்மார்க்க நோக்கில், ஆன்மா தான் குறிஞ்சி மலர்

 


2. பழமொழிகளும் உண்மைகளும் :

1. பழமொழி : ஆறிலும் சாவு - நூறிலும் சாவு


நமக்கு கற்பிக்கபட்ட பொருள் :
ஆறு வயதிலும் சாவு - நூறு வயதிலும் சாவு

உண்மைப் பொருள் : குந்தி மைந்தன் கர்ணன் , தான் பாண்டவர்கள் பக்கம் சேர்ந்து ஆறானாலும் தனக்கு மரணம் நிச்சயம் - கௌரவர்கள் ( நூறு பேர்) பக்கமே தொடர்ந்தாலும் , தனக்கு சாவு நிச்சயம் என்று கூறியது திரிக்கப்பட்டிருக்கின்றது



2 பழமொழி : அடி உதவுது மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான்

நமக்கு கற்பிக்கபட்ட பொருள் :
அடி என்பது அடித்தல், உதைத்தல் போன்றவை

உண்மைப் பொருள் :
“திருவடி” போன்று உதவுவதில் யாரும் நிகரில்லை என்பது தான் உண்மையான பொருள்




வெங்கடேஷ்



[vallalargroups:5486] அருள்

I அருள் :

1. அருளுறில் எல்லாமாகும்

2. அருளைப் பெற்றால், ஒரு துரும்பும் ஐந்தொழில் செய்யும்

3. அருளின் பெருமை அகவலில் 1000வது வரி முதல் 20 வரிகளில் வள்ளலார் விளக்குகின்றார்

4 கதி இருக்கின்ற திருச்சிற்றம்பலத்திலே கருணை
நீதி இருக்கின்றாதலால்

5 அருள் விளங்கிய திருச்சிற்றம்பலத்திலே அழியாப்
பொருள் விளங்குதல் காண்மினோ


அருள் - விளக்கம் :

அருளைப் பெறுவது என்பது ஒரு சாதகன் தன் உடம்பில் அருட்கலையை ( அருளொளி ) வீசச் செய்வது. சுத்த உஷ்ணத்தினால், முப்புரத்தை சினந்த பின்னும், மாயத்திரைகள் யாவும் எரிந்து தீக்கிரையான பின்னும், வெண்மையான பொடி போன்று துகள்கள் சிரத்தின் மீதிலிருந்து சாதகன் உடல் முழுதும் வீசும்.

இதனைத் தான் சமயம் திரு நீறு என்கிறது.

இதன் அடையாளமாகத் தான் , அனேக சாமியார்கள் தங்கள் உடல் முழுதும் திரு நீறு/ சாம்பல் பூசிக் கொண்டிருப்பார்கள்


பயிற்சி :

பரவிந்து பரநாதத்துடன் கலந்த பிறகு தான், ஒரு சாதகன் அருளை பெற முடியும் - அதற்கு விந்து , பரவிந்துவாக மாற வேண்டும் .


அருள் பெறும் இடம் :

அருள் விளங்குவது சிற்றம்பலத்தே என்பதால் , ஒரு சாதகன் சிற்றம்பலத்திற்குள் நுழைந்த பிறகு தான் , அருளைப் பெற முடியும் - அதற்கு நம் உணர்வு மிகவும் நுணுகி , நுண்மை - இறைத் தன்மை அடைய வேண்டும் - அணுவை விடவும் நுண்மை அடைய வேண்டும்




வெங்கடேஷ்


Tuesday, June 24, 2014

[vallalargroups:5485] INCLUDE MR.MUTHUKUMAR IN TO THE VALLALAR GROUPS

DEAR  KARTHIKEYAN,

PLS. INCLUDE MR.MUTHUKUMAR; muthukumar@imc.net.in; INTO NETWORK OF VALLALAR GROUPS.

THANKS
SOMANATHAN.T.B


 

OK,. PLS  SND YR PERSL  EMAIL ID


From: muthukumar@imc.net.in
To: somanathan007@hotmail.com
Subject: RE: PLS CHK web site about spiritual reality in meditation and cosmic energy
Date: Tue, 24 Jun 2014 11:33:12 +0530

That's fine – pl send through your email id. I cannot register as of now.

 

From: SOMANATHAN T .B [mailto:somanathan007@hotmail.com]
Sent: Tuesday, June 24, 2014 9:27 AM
To: Muthukumar
Subject: PLS CHK web site about spiritual reality in meditation and cosmic energy

 

DEAR MUTHU, 

 

BETTER   REGTR YR SELF WITH  vallalargroups@gmail.com. U'LL GET INFMN ABT VALLALAR NEWS.

 

U AWARE THAT ALREADY I HAD SENT ' WEBSITE OF SPIRITUAL REALITY THRO MEDITATION'.

 

IN THIS U WILL COME TO KNW THE COSMIC ENERGY CONNECTIVITY.

 

THANKS

 

SOMANATHAN


From: muthukumar@imc.net.in
To: somanathan007@hotmail.com
Subject: RE: [vallalargroups:5484]
மூளை - தலைமைச் செயலகம் - பாகம் 2
Date: Mon, 23 Jun 2014 19:10:16 +0530

Thanks – looks informative.

 

From: SOMANATHAN T .B [mailto:somanathan007@hotmail.com]
Sent: Monday, June 23, 2014 6:12 PM
To: muthukumar@imc.net.in
Subject: FW: [vallalargroups:5484]
மூளை - தலைமைச் செயலகம் - பாகம் 2
Importance: High

 

 


Subject: [vallalargroups:5484] மூளை - தலைமைச் செயலகம் - பாகம் 2
From: venkatesh@precot.com
To: vallalargroups@googlegroups.com
CC: vallalargroups@gmail.com
Date: Mon, 23 Jun 2014 10:41:01 +0530

மூளை - தலைமைச் செயலகம் - பாகம் 2

1. மூளையும் - பிரபஞ்ச சக்தியும் :

நாம் ஒரு நாள் சரியாகத் தூங்கவில்லையெனில், நமக்கு உற்சாகம் , சுறுசுறுப்பு எல்லாம் போய்விடுகின்றது - ஏன் ??

உடலுக்கு தேவையான சக்தி கிடைக்கவில்லை . நாம் தான் தினமும் 3 வேளை உணவு சாப்பிடுகின்றோமே என்று கேட்டால், மனிதன் உணவினால் மட்டும் வாழ்வதில்லை - இந்த உடலுக்கு பிரபஞ்ச சக்தியும் மிகவும் அவசியம் ஆகும்

அதனால் தான் புனித நூல் பைபிள் : " Man does not live by bread alone" என்று சொல்கின்றது

நாம் தூங்கும் போது , மூளை ஓய்வெடுத்துக் கொள்கின்றது - அப்போது அது பிரபஞ்சத்திலிருந்து ( cosmic space ) சக்தியை கிரகித்துக் கொள்கின்றது - அதனால் உடலுக்கு தேவையான சக்தியும் - சுறுசுறுப்பும் , தெம்பும் , உற்சாகமும் கிடைத்துவிடுகின்றது .



இதை கண்டறிந்த ஞானிகளும் ரிஷிகளும் , தூங்காத தூக்கம் என்ற சாதனை செய்து - அதன் மூலம் சிதாகாயத்திலிருந்து பிரபஞ்ச சக்தியைக் கிரகித்து , உடலுக்கு தேவையான சக்தியைப் பெற்று, ஊண், உறக்கம் , ஓய்வு இல்லாமல் தங்கள் சாதனையில் முன்னேறி, தங்கள் லட்சியத்தை அடைந்தனர்

ஞானிகள் , தங்கள் சாதனையில், மனதை - மூளையை அமைதி - ஓய்வடையச் செய்து , இந்த சக்தியைப் பெற்றனர் என்பது உறுதி .

அதனால் நாமும் , அதிக நேரம் சாதனைக்கு செலவிட்டால், உணவு, உறக்கம் , தாகம், ஓய்வு இல்லாமல் வாழலாம்.

இது எப்படி இருக்கிறதுவென்றால் : சூரிய சக்தியை பயன்படுத்தி, மின்சக்தி தேவையை குறைப்பதுபோல், பிரபஞ்ச சக்தியை பயன்படுத்தி, நாம் உணவு, நீர், தூக்கம் மீதுள்ள சார்பு நிலைமையை மாற்றிக் கொள்வதற்கு ஒப்பாகும்

புறத்திலுள்ள சூரியன் - ஆன்ம சூரியன் ஆகும்



2. கோவில் கருவறை அமைப்பு :

தமிழ் நாட்டில் , அனேகமாக எல்லா கோவில்களிலும் , மூலஸ்தானம் - மூலவர் - ஆயிரங்கால் மண்டபத்தில் இருப்பார். அதன் உண்மையான தாத்பரியம் யாதெனில் :

ஆயிரங்கால் மண்டபம் - மூளை
மூலவர் - ஆன்மா

மூளையின் நடுவே உட்புறத்தில், ஆன்மா ஆழமாக வைக்கப்பட்டிருக்கின்றது

3.
நாம் திருவடிக் கொண்டு பயிற்சி செய்ய செய்ய , இருள் சூழ்ந்துள்ள செல்கள் எல்லாம் , ஒளி மயம் ஆகி, கெட்ட குணங்கள் ஒழிந்து , மேலான குணங்களான அன்பு, கருணை, தயவு ஓங்கி வளரும் - இதனால் சத்துவ குணம் தழைத்து சாந்தம் , அமைதி , மௌனம் எல்லாம் வரும்



வெங்கடேஷ்

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)